தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் 500 'கலைஞர் உணவகங்கள்'

2 mins read
33ae0842-a4af-4d83-98cd-f9e04ae01251
சென்­னை­யில் செயல்­படும் இந்த அம்மா உண­வ­கத்­தைப் போல் தமிழ­கம் எங்­கும் கரு­ணா­நிதி உண­வ­கம் அமை­யும். படம்: ஊட­கம் -

புது­டெல்லி: அம்மா உண­வ­கம் போல தமி­ழ­கத்­தில் 500 'கலை­ஞர் உண­வ­கங்­கள்' அமைக்­கப்­படும் என்று புது­டெல்லி கூட்­டத்­தில் உண­வுத் துறை அமைச்­சர் சக்­க­ர­பாணி அறி­வித்­தார்.

இந்­தி­யா­வில் 'மாதிரி சமு­தாய சமை­யல் கூடம்' என்ற திட்­டத்தைச் செயல்­ப­டுத்­து­வது பற்றிய ஆலோ­சனைக்­ கூட்­டம் புது­டெல்­லி­யில் மத்­திய அமைச்­சர் பியூஷ் கோயல் தலை­மை­யில் நடத்­தது.

அதில் கலந்­து­கொண்ட தமி­ழக அமைச்­சர், தமி­ழ­கத்­தில் 2007ல் நடை­மு­றைக்கு வந்த பொது­வி­நி­யோ­கத் திட்­டம் பற்றி பேசி­னார்.

வரும் பொங்­கலை முன்­னிட்டு 2022 ஜன­வ­ரி­யில் 21 உண­வுப் பொருட்­கள் அடங்­கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்­களுக்கு ரூ.1,161 கோடி­யில் வழங்­கப்­பட உள்­ள­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தமி­ழக அரசு 650 சமூக உண­வ­கங்­களை 'அம்மா உண­வ­கம்' என்ற பெய­ரில் தமி­ழ­கம் முழு­வ­தும் உள்­ளாட்சி அமைப்­பு­கள் மூலம் நடத்தி வரு­வ­தா­க­வும் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் நவம்­பர் 18ஆம் தேதி வரை 15 கோடிக்­கும் மேற்­பட்­டோர் அந்த உண­வ­கங்­கள் மூலம் பய­னடைந்து உள்­ள­தா­க­வும் குறிப்­பிட்ட அமைச்­சர், இதே­போல கூடு­த­லாக 500 சமு­தாய உண­வ­கங்­கள் 'கலை­ஞர் உண­வ­கம்' என்ற பெய­ரில் அமைக்­கப்­படும் என்­றும் அறி­வித்­தார்.

இத்­திட்­டத்­துக்கு இந்த நிதி­யாண்­டில் செப்­டம்­பர் மாதம் வரை 3,227 டன் அரி­சி­யும் 362 டன் கோது­மை­யும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. ஓர் உண­வ­கத்­துக்குச் சரா­ ச­ரியாக மாதத்­துக்கு ரூ.3.5 லட்­சம் செல­வி­டப்­ப­டு­கிறது.

இத்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக தொடர்ந்து நடத்­த­வும் விரி­வு­படுத்­த­வும் மத்­திய அரசு 100% நிதி­யு­தவி வழங்க வேண்­டும் என்று அமைச்­சர் கோரிக்கை விடுத்­தார்.