சென்னை: தமிழகத்தில் பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவற்றை ஒழிக்க முழு மூச்சாக முயலப்போவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
இதன் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்துகொள்வதுமான செய்தி யைக் கேள்விப்படும் போது அவமானமாக இருப்பதாகக் கூறினார்.
"அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது," என்று அவர் கூறி னார். பாலியல் வன்முறைக்கு ஆளாவோர் அதைப்பற்றி வெளிப் படையாகப் புகார் செய்யத் தயங்கக்கூடாது என்றாரவர்.