முதல்வர்: சிறார் பாலியல் கொடுமைகள் பெரும் அவமானம்; அவற்றை ஒழித்துக்கட்டுவேன்

முதல்வர்: சிறார் பாலியல் கொடுமைகள் பெரும் அவமானம்; அவற்றை ஒழித்துக்கட்டுவேன்

1 mins read
bfa1b2be-2042-4698-85f6-2417682e92e9
-

சென்னை: தமி­ழ­கத்­தில் பெண்­கள், சிறார்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் தொல்­லை­கள் அதி­க­ரித்து வரு­வ­தாகவும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் மூலம் அவற்றை ஒழிக்க முழு மூச்­சாக முய­லப்­போ­வ­தாகவும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உறு­தி­பட தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் காணொளி ஒன்றை வெளி­யிட்ட அவர், பெண்கள், குழந்­தை­கள் மீதான பாலி­யல் வன்­மு­றை­யும் அதைத் தொடர்ந்து அவர்­கள் தற்­கொலை செய்துகொள்­வ­து­மான செய்தி யைக் கேள்­விப்­படும் போது அவ­மா­ன­மாக இருப்­ப­தா­கக் கூறி­னார்.

"அறத்­தை­யும் பண்­பாட்­டை­யும் அதி­கம் பேசும் ஒரு சமூ­கத்­தில், கல்­வி­யி­லும் வேலைவாய்ப்­பி­லும் முன்­னே­றிய ஒரு நாட்­டில், அறி­வி­ய­லும் தொழில்நுட்­ப­மும் வளர்ந்த காலகட்­டத்­தில் இப்­ப­டிப்­பட்ட கேவ­ல­மான, அரு­வ­ருப்­பான செயல்­களும் நடக்­கத்­தான் செய்­கின்­றன என்­பது வெட்­கித் தலை­கு­னிய வைக்­கிறது," என்று அவர் கூறி னார். பாலியல் வன்முறைக்கு ஆளாவோர் அதைப்பற்றி வெளிப் படையாகப் புகார் செய்யத் தயங்கக்கூடாது என்றாரவர்.