சமயபுரம்: தனது கண்ணான கண வரின் உடலுறுப்புகளைத் தானம் செய்து, மூவரின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளார் மனைவி சுபத்ரா தேவி.
சமயபுரம், சோழன்நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் செல்வராஜ், 47. கடந்த ஜூலை மாதம் சென்னை தேசிய நெடுஞ்சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி அரசின் பாராட்டு களைப் பெற்றவர் சுபத்ரா தேவி.
இந்நிலையில், "கணவரை இழந்த பிறகு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் தடை பட்டது மட்டுமின்றி குழந்தைகளின் படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்," என்று சுபத்ரா தேவி கோரியுள்ளார்.
"உடல் உறுப்புகள் தானத்திற்கு ஆரம்பத்தில் படிப்பறிவு இல்லாத நான் மறுத்துவிட்டேன். ஆனால், எனது மகன் அசோக்ராஜ், 19, மகள் கங்காஷர்மி, 17, அளித்த ஊக்கத்திற்குப் பிறகு ஒப்புக்கொண்டேன்.
"கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த என் கணவரின் உடல் உறுப்புகள் மூலம் மூவர் உயிர் வாழ இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"என் வாழ்க்கையே பறிபோனதாக உணர்ந்த நான், என் கணவரால் மூவர் உயிர் பிைழத்ததை நினைத்து நிம்மதி அடைகிறேன்," என்கிறார் சுபத்ரா.
"எனது கணவர் உடல் உறுப்புகளைத் தானம் பெற்றவர்களை நான் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு எதாவது ஒன்று எனில், அவற்றை தாங்கிக் கொள்ளும் மனநிலை என்னிடம் இல்லை," என்கிறார் சுபத்ரா.
என் கணவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், உடல் உறுப்புகள் தானத்தால் இன்னும் அவர் உயிர்வாழ்ந்து வருவதாகவே நிம்மதி அடைகிறேன்.
மனைவி சுபத்ராதேவி