கோவை: கோவையில் விரைவு ரயில் மோதி யானைகள் உயிரிழந்த சம்பவம் ெதாடர்பில், ரயில் ஓட்டுநர் சுபயர், அவரது உதவியாளர் முகில் ஆகிய இருவர் மீதும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் ரயில் இயக்கப்பட்டிருப்பது உறுதியானால் ரயில் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கோவை நவக்கரையில் நேற்றுமுன்தினம் வரை ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மூன்றாக இருந்தது இப்ேபாது நான்காக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி யானது. யானையின் வயிற்றில் இருந்த குட்டி யானை சடலமாக வெளியே எடுக்கப்பட்டது.
இதற்கிடைேய, ரயில் எந்த வேகத்தில் இயக்கப்பட்டது என்பது தொடர்பாக கேரளாவுக்கு விசா ரணை நடத்தச் சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் சிறைபிடிக்கப்பட்டனர். 6 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கேரளாவில் தமிழக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.