விரைவு ரயில் மோதி நான்கு யானைகள் பலி: ரயில் ஓட்டுநர், உதவியாளர் மீது வழக்குப்பதிவு

விரைவு ரயில் மோதி நான்கு யானைகள் பலி: ரயில் ஓட்டுநர், உதவியாளர் மீது வழக்குப்பதிவு

1 mins read
1db67b39-7b19-4735-a0b2-224d8599468a
-

கோவை: கோவை­யில் விரைவு ரயில் மோதி யானை­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வம் ெதாடர்­பில், ரயில் ஓட்­டு­நர் சுப­யர், அவ­ரது உத­வி­யா­ளர் முகில் ஆகிய இரு­வர் மீதும் வன உயி­ரி­னப் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்டுள்­ளது.

வன­வி­லங்­கு­கள் நட­மா­டும் பகு­தி­களில் ஒரு குறிப்­பிட்ட வேகத்­தில் மட்­டுமே ரயிலை இயக்க வேண்­டும் என்ற விதி­முறை உள்ள நிலையில், இந்­தக் கட்­டுப்­பாடுகளை மீறும் வகை­யில் ரயில் இயக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னால் ரயில் ஓட்­டு­நர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படுவது உறுதி என மண்­டல வனப் பாது­கா­வ­லர் ராமசுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, கோவை நவக்­கரை­யில் நேற்றுமுன்­தி­னம் வரை ரயில் மோதி உயி­ரி­ழந்த யானை­களின் எண்­ணிக்­கை ­மூன்றாக இருந்தது இப்ேபாது நான்­காக அதி­க­ரித்­துள்­ளது. உயி­ரி­ழந்த பெண் யானை கரு­வுற்­றி­ருந்­தது பிரே­தப் பரி­சோ­த­னை­யில் உறுதி யானது. யானை­யின் வயிற்­றில் இருந்த குட்டி யானை சட­ல­மாக வெளியே எடுக்­கப்­பட்­டது.

இதற்கிடைேய, ரயில் எந்த வேகத்தில் இயக்கப்பட்டது என்பது தொடர்பாக கேரளாவுக்கு விசா ரணை நடத்தச் சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் சிறை­பி­டிக்­கப்­பட்­ட­னர். 6 மணி­நேர பேச்­சு­வார்த்­தைக்­குப் பின்­னர் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

கேர­ளா­வில் தமி­ழக அதி­கா­ரி­கள் சிறை­பி­டிக்­கப்­பட்­ட­தைக் கண்­டித்து கோவை­யில் பல்­வேறு அமைப்­பு­களும் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தால் பதற்­றம் நிலவியது.