சென்னை: மதுபானக் கூடங்களுக்கும் 'டாஸ்மாக்' மதுக் கடைகளுக்கும் வருபவர்கள் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாகப் போட்டிருக்க வேண்டும் என்று மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முன்னணி மாநிலமாகத் தமிழகத்தை திகழச் செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
அதன்படி, வாரத்தில் இரு முறை வியாழன், ஞாயிறன்று மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் 12வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
"பருவமழை காலத்திலும் மக்கள் முகாம்களுக்கு அதிகமாக வருகின்றனர். தடுப்பூசி போடுவது மாெபரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது," என்று அமைச்சர் கூறினார்.