சென்ைன: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த 11,000க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலூா், திண்டுக்கல், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 11,329 பேரும் சென்னையில் 653 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
மாநிலம் முழுவதும் அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தக் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடியில் மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் மழைநீர் அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அடுத்த சில நாள்களுக்கும் இந்தக் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து மக்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உங்களோடு நானும் களத்தில் நிற்பேன் என்றும் முதல்வர் கூறினார்.
200 ஆண்டுகளில் அதிக மழை
வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் வழக்கத்தை விட 77% மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,000 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இந்தளவுக்கு மழை பெய்துள்ளது, நான்காவது முறையாகும். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு சதமடித்திருப்பது மூன்றாவது முறையாகும் என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
41 கிராமங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த வியாழன் முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அனைத்து குளங்கள், குட்டைகள், ஏரிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வழிகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியின் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து 21 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இேதபோல், அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களில் பொழிந்த கனமழை காரணமாக மூன்றாவது முறையாக வெள்ளாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரமுள்ள 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.