சென்னை: நெகிழி (பிளாஸ்டிக்) பைகளின் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு எதிரான பிரசாரம் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்போடு நெகிழியை ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் விதி முறைகளைப் பின்பற்றுவதில்லை.
இதனால், மாநில அளவில் துணிப்பைகளை உபயோகிக்கும் வகையில் 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடங்க உள்ளதாக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.