விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 பரிசு

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 பரிசு

1 mins read
5bf2db57-b963-4939-91ce-430bcc044c4e
-

சென்னை: சாலை விபத்­தில் சிக்­கி­ய­வர்­களை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவுப­வர்­களை ஊக்கு­விக்­கும் வகை­யில் அவர்­க­ளுக்கு ரூ.5,000 ஊக்­கத்தொகை பரிசாக வழங்­கப்­பட உள்­ளது. அத்துடன், தேசிய அளவில் ஆண்டுதோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

மத்­திய அர­சின் சாலைப் போக்கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லைத்­துறை அமைச்­ச­கம் இந்­த ஊக்கத் தொகை வழங்­கும் திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

சாலை விபத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்களுக்கு அவ­சர கால உத­வியை பொது­மக்­கள் தயங்­கா­மல் வழங்­க­வேண்­டும் என்­பதே இத்­திட்­டத்­தின் முக்­கிய நோக்கம். ஓர் ஆண்­டில் ஒருவர் ஐந்து முறை இந்தப் பரி­சுத்தொகையைப் பெற லாம் என்று கூறப்பட்டுள்ளது.