பருவமழையால் 105 பேர் பலி; ரூ.15 கோடி நிவாரண நிதி

பருவமழையால் 105 பேர் பலி; ரூ.15 கோடி நிவாரண நிதி

2 mins read
68d06413-3803-4a14-a6b7-7a8ed1fbe8f0
-

சென்னை: தமி­ழ­கத்­தில் வெள்ள நிவா­ர­ணப் பணி­களும் மழை வெள்­ளத்­தில் இருந்து மக்­க­ளைப் பாது­காப்­பாக மீட்­கும் நட­வ­டிக்­கை­களும் துரி­த­க­தி­யில் முடுக்கிவிடப்­பட்­டுள்­ள­தாக வரு­வாய், பேரி­டர் மேலாண்மைத் துறை அமைச்­சர் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்துள்ளார்.

சென்னை எழி­ல­கத்­தில் உள்ள மாநில அவ­சர கட்­டுப்­பாட்டு மையத் தில் ஆய்வு மேற்­கொண்ட பின்­னர் ெசய்­தி­யா­ளர்­களிடம் பேசி­னார்.

"வட­கி­ழக்­குப் பருவமழை­யால் மாநி­லம் முழு­வ­தும் இது­வரை 105 பேர் பலி­யாகி உள்­ள­னர். அத்­து­டன், 2,943 கால்­ந­டை­கள் இறந்­துள்­ளன. மொத்­தம் 1,814 குடி­சை­களும் 310 வீடு­களும் சேதம் அடைந்­துள்­ளன," என்­றும் அமைச்­சர் குறிப்பிட்டார்.

தமி­ழ­கத்­தில் கடந்த அக்­டோ­பர் 25ஆம் தேதி முதல் வழக்­கத்­திற்கு மாறாக கன­மழை விடாது பெய்து வரு­கிறது என்றார்.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் செங்­கல்­பட்டு, மயி­லா­டு­துறை, திரு­வா­ரூர், நாகப்பட்­டி­னம், சென்னை, ராம­நா­த­பு­ரம் மாவட்­டங்­களில் அதிக மழை பெய்­துள்­ளது.

அதி­க­பட்­ச­மாக செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் 53.81 மி.மீட்­ட­ரும் மயி­லா­டு­துறையில் 51.88 மி.மீட்­ட­ரும் திரு­வாரூரில் 41.70 மி.மீட்­ட­ரும் சென்­னை­யில் 40.09 மி.மீட்டரும் மழை பதி­வா­கி­யுள்­ளன.

வட­கி­ழக்­குப் பரு­வ­மழை இயல்பை விட­ 76% கூடு­த­லா­கப் பெய்­துள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் 188 நிவா­ரண முகாம்­களில் 15,016 பேர் தங்க வைக்­கப்­பட்டு உள்­ள­னர். சென்னை யில் உள்ள ஏழு நிவா­ரண முகாம்­களில் 1,048 பேர் தங்கவைக்­கப்­பட்டு உள்­ள­னர்.

ரூ.15.9 கோடி நிவா­ர­ணம்

"மழை­யால் உயி­ரி­ழந்­தோ­ரில் 59 பேரின் குடும்­பங்­க­ளுக்கு ரூ.2.36 கோடியும் காய­ம­டைந்த 13 பேருக்கு 55,900 ரூபாயும் நிவாரணமாக வழங்­கப்­பட்டு உள்­ளது.

"அத்துடன், 2,943 கால்­ந­டை­களை இழந்தவர்களுக்கு 3.43 கோடி ரூபாய்; குடி­சை­களை இழந்த 24 ஆயி­ரத்து 810 பேருக்கு 10.1 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை ரூ.15.9 கோடி நிவா­ர­ண­மாக மக்களுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது," என்று அமைச்சர் ராமச்­சந்­தி­ரன் கூறினார்.