வானிலை மையம்: தொடர்ந்து மழை படிப்படியாகக் குறையும் தேங்கிய நீரை அகற்றும் பணி தொடர்கிறது; சுனாமி குடியிருப்பில் முதல்வர் ஆய்வு

வானிலை மையம்: தொடர்ந்து மழை படிப்படியாகக் குறையும் தேங்கிய நீரை அகற்றும் பணி தொடர்கிறது; சுனாமி குடியிருப்பில் முதல்வர் ஆய்வு

2 mins read
48e3f0b1-98aa-4bbe-8877-e01c2c999ef6
பாதிக்கப்பட்ட மக்கள் 'பைபர்' படகுகளில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது. படம்: இபிஏ -

சென்னை: தெற்கு அந்­த­மான் வங்­கக் கடல் பகு­தி­யில் புதிய காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி உரு­வா­கி­யுள்­ள­தாக இந்­திய வானிலை ஆய்வு மையம் அறி­வித்­துள்­ளது.

இது புய­லாக மாறும் வாய்ப்­புள்ள தாக­வும் இது வடக்கு ஆந்­தி­ரம், தெற்கு ஒடிசா இடையே கரை­யைக் கடக்­கும் என்­றும் இம்­மை­யம் முன்­னு­ரைத்­துள்­ளது.

ஆனால், இந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி­யி­னால் தமி­ழ­கத்­திற்கு எந்த ஒரு பாதிப்­பும் ஏற்­ப­டாது என்­றும் சென்­னை­யைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்­திற்கு நக­ரின் ஒரு சில இடங்­களில் மிதமான மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் இந்­திய வானிலை ஆய்வு மையம் கூறி­யுள்­ளது.

கும­ரிக் கடல் பகு­தி­யில் நில­வும் வளி­மண்­டல மேல­டுக்கு சுழற்சி கார­ண­மாக, தமி­ழ­கத்­தில் பெரும் பாலான மாவட்­டங்­க­ளி­லும் கடந்த சில நாள்­க­ளா­கவே பர­வ­லாக மழை பெய்து வரு­வ­தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்­துள்­ளது.

இந்த மழை தமி­ழ­கத்­தில் டிசம்­பர் 3ஆம் தேதிவரை நீடிக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், மழைக்கு வாய்ப்பு இல்லை என இந்­திய வானிலை மைய­மும் தமி­ழ­கத்­தில் இனி வரும் நாள்­களில் மழை படிப்­ப­டி­யா­கக் குறை­யத் துவங்­கும் என சென்னை வானிலை ஆய்வு மைய­மும் தெரி வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, சென்­னை­யில் அவ்­வப்­போது மழை பெய்­வ­தால் தண்­ணீரை அகற்­றிய இடத்­தில் மீண்­டும் தண்­ணீர் சூழும் நிலை உள்ளது. இதனால், தேங்­கிய மழை­நீரை வெளி­யேற்­றும் பணி சவா­லாகி உள்­ளது.

இது­கு­றித்து மாந­க­ராட்சி அதி காரி­கள் கூறு­கை­யில், "மண்டலத்­தில் 69 மின் மோட்­டார்­கள் மூலம் மழை­நீரை வெளி­யேற்றி வரு­கி­றோம். பாதிக்­கப்பட்ட மக்­களுக்கு முகாம்­களில் உத­வி­களும் வழங்­கப்­படு­கிறது," என்­ற­னர்.

இதற்­கி­டைேய, பல மாவட்­டங்­களிலும் பள்­ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு அந்­தந்த மாவட்ட நிர்­வா­கங்­கள் விடு­முறை அறி­வித்து இருந்­தன.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று சென்னை, செம்­மஞ்­சேரி சுனாமி குடி­யி­ருப்­பில் உள்ள பகு­தி­களில் மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­களைப் பார்­வை­யிட்டு, ஆய்வு செய்து சீர­மைப்புப் பணி­கள், சாலை­களில் தேங்­கி­யுள்ள நீரை உட­னடி­யாக வெளி­யேற்ற அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.