சென்னை: 'ஓமிக்ரான்' எனப்படும் உருமாறிய கொரோனா ெதாற்று தமிழக மக்களிடம் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்துக்கு வரும் பன்னாட்டு விமானப் பயணிகள் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவர் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கூறியுள்ளாா்.
"தமிழ்நாட்டில் 'ஓமிக்ரான்' தொற்றால் யாரும் பாதிக்கப்பட்ட தாக இதுவரை தெரிய வரவில்லை. இக்கிருமி மாநிலத்துக்குள் நுைழயாமலும் தொற்றாமலும் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனைகளைத் தொடா்ந்து வருகிறோம்.
"உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்புகளைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதமாக இருப்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் பொதுமக்களி டையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்," என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக விமான நிலை யங்களுக்கு தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூ சிலாந்து, சிங்கப்பூா், பிரேசில், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக ஆா்டிபிசிஆா் பரி சோதனை செய்து, நோய்த்தொற்றில்லை என்ற முடிவு தெரிந்த பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என்றும் இறை யன்பு கூறினார்.
இதற்கிடையே, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில், தனியாா், அரசு ஆய்வகங்களில் 'ஓமிக்ரான்' கிருமியைப் பரிசோதிக்கும் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தர விட்டுள்ளார்.
'ஓமிக்ரான்' பாதிப்புகளை மூன்று மணி நேரத்தில் கண்டறி வதற்கான ஆய்வக வசதிகளை அனைத்துலக விமான நிலையங்கள் அமைந்துள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட உள்ளது.

