சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் என்ற கோயிலை மீட்டெடுக்கும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக அலு வலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினார்.
"மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடம் அதிமுக தொண்டா்களின் கோயிலாக மதிக்கப்படுகிறது. அவா் வாழ்ந்த இல்லத்தை பொது மக்கள் அனைவரும் பாா்வையிட வேண்டும் என்பதற்காகவே அரசுைடமை ஆக்கினோம்.
"ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் விருப்பத்துக்கு நேர்மாறாக அமைந்து, அதிமுக தொண்டா்களையும் பெரும் வேதனை அடையச்செய்துள்ளது.
"நானும் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் இன்று நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் தீர ஆலோசித்து மேல்முறையீடு செய்வோம்," என்றாா்.
ஒரு சில தினங்களுக்கு முன்பு தான், ஜெயலலிதாவின் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் மூன்று வாரங்களுக்குள் வழங்கவேண்டும் என்று கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும் ஜெ.தீபக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணியிடம் மனு அளித்திருந்தனர்.
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சட்டப்படி வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் இல்லத்தை மூன்று வாரங்களுக்குள் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், "ஜெயலலிதா வாழ்ந்த கோயிலை நிச்சயமாக மீட்டெடுப்போம்," என்று பழனிசாமி கூறியுள்ளார்.

