திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஜெயராமன் என்ற விவசாயி நிலத்தில் ஊழியர்கள் நெற்கதிர்களை அறுவடை செய்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று நெளிந்துள்ளது. இதைக்கண்ட பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர், 12 அடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பை பிடித்து ஆம்பூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
படம்: தமிழக ஊடகம்