வைகை அணை நிரம்பியது: ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வைகை அணை நிரம்பியது: ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

2 mins read
737eae57-5247-4de9-a449-e48b90816e6d
தாமிரபரணி ஆற்றில் இப்போது சுமார் 50,000 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல தரைப் பாலங்கள் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டன.படம்: ஊடகம் -

அமைச்சர்: மாநிலம் முழுவதும் 8,075 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன

மதுரை: வைகை அணை­யில் இருந்து தண்­ணீர் திறந்­து­வி­டப்­பட்­டதை அடுத்து ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மைய சில தினங்­க­ளாக தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் பர­வ­லாக கன­மழை பெய்­தது. இத­னால் மாநி­லம் முழு­வ­தும் உள்ள அணை­கள், ஏரி­கள், குளங்­கள், குட்டை­கள் பெரும்­பா­லா­னவை நிரம்பி உள்­ளன.

பல ஆறு­களில் வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்­ட­தா­லும், குடி­யி­ருப்­புப் பகுதி­களை வெள்­ளம் சூழ்ந்­த­தா­லும் லட்­சக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­ட­னர். மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது.

தமி­ழ­கத்­த­தில் மொத்­தம் 14,138 ஏரி­கள் உள்­ளன. அவற்­றுள்ள 8,075 ஏரி­கள் முழுக் கொள்­ள­ளவை எட்டி­உள்­ள­தாக அமைச்­சர் சாத்­தூர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் உள்ள 90 நீர்த்­தேக்­கங்­க­ளின் மொத்த கொள்­ள­ள­வான 224.297 டிஎம்­சி­யில் 209.945 டிஎம்சி இருப்பு உள்­ளது என்­றும் இது 93.60 விழுக்­காடு என்­றும் அவர் சட்­டப்­பே­ர­வை­யில் தெரி­வித்­தார்.

தேனி மாவட்­டம் ஆண்­டிப்­பட்டி அருகே 71 அடி உய­ரம் கொண்ட வைகை அணை உள்­ளது. தேனி, திண்­டுக்­கல், மதுரை, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளின் முக்­கிய நீரா­தா­ர­மாக விளங்கி வரும் இந்த அணை தற்­போது முழுக் கொள்­ள­ளவை எட்­டி­யுள்­ளது.

தேனி மாவட்­டத்­தின் நீர்ப்­பிடிப்புப் பகு­தி­களில் பெய்த கன­மழை காரண­மாக வைகை அணை கடந்த ஒரே மாதத்­தில் மட்­டும் மூன்­றா­வது முறை­யாக நிரம்பி உள்­ளது. அணை­யின் நீர்­மட்­டம் 70 அடியை எட்­டி­ய­தை­ய­டுத்து, அணைக்கு வரும் உபரி நீர் திறந்­து­வி­டப்­பட்­டது.

வைகை ஆற்­றின் நீர்ப்­பி­டிப்பு பகு­தி­க­ளான வெள்­ளி­மலை, வருச­நாடு, மேக­மலை சுற்­று­வட்­டாரப் பகு­தி­களில் நேற்று முன்­தி­னம் இரவு தொடர்ந்து நீடித்த கன­மழை கார­ண­மாக வைகை ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே தாமி­ர­ப­ரணி ஆற்­றில் வினா­டிக்கு 50 ஆயி­ரம் கன­அடி பெருக்­கெ­டுத்து ஓடு­வ­தால் அதன் நீர்ப்­பா­தை­யில் உள்ள தரைப்­பா­லங்­கள் பல­வும் மூழ்­கி­யுள்­ளன. இத­னால் மேல­நத்­தம், சீவ­லப்­பேரி உள்­ளிட்ட பகு­தி­களில் போக்­கு­வரத்து முடங்­கி­யது.

தேனி மாவட்­டம் பெரி­ய­குளம் பகு­தி­யில் பெய்த கன­மழை காரண­மாக மூன்று வீடு­கள் இடிந்து விழுந்­தன. இதில் உயி­ரி­ழப்பு ஏதும் இல்லை.

காஞ்­சி­பு­ரத்­தில் வேக­வதி ஆற்­றில் நள்­ளி­ர­வில் திடீர் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. இத­னால் கரை­யோ­ரப் பகு­தி­களில் உள்ள வீடு­களை வெள்­ளம் சூழ்ந்­தது. காஞ்­சி­பு­ரத்­தில் உள்ள அனைத்து ஏரி­களும் நிரம்­பி­விட்­டன.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில், பொதுப்­ப­ணித் துறை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள 528 ஏரி­கள் முழு­வ­து­மாக நிரம்­பி­யுள்­ளன.

காட்­டாங்­கொ­ளத்­தூர் ஒன்­றி­யத்­தில் உள்ள வீடு­களை வெள்­ளம் சூழ்ந்­துள்ள நிலை­யில், அத்­தியா­வசியப் பொருள்­களை வாங்க மக்­கள் இடுப்­ப­ளவு தண்­ணீ­ரில் நட­மாட வேண்­டி­யுள்­ளது.

மது­ரை­யில் பெய்த மழை­யால் ஆட்­சி­யர் அலு­வ­ல­கம், அரசு மருத்­து­வ­ம­னையை மழை நீர் சூழ்ந்­துள்­ளது. நூற்­றுக்­கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பு­களில் தண்­ணீர் புகுந்­த­தால் மக்­கள் தவிப்­புக்கு ஆளாகி உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.