ஜெயலலிதா நினைவு தினம்: சசிகலா முக்கிய அறிவிப்பு

ஜெயலலிதா நினைவு தினம்: சசிகலா முக்கிய அறிவிப்பு

1 mins read
e7769f94-47d2-4e6b-8659-091459c3512b
-

சென்னை: முன்­னாள் முதல்வர் ஜெய­ல­லி­தா­வின் நினைவு தினத்தை­யொட்டி, அவ­ரது நினை­வி­டத்­தில் அஞ்­சலி செலுத்­து­கி­றார் சசி­கலா. அப்போது அவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

அதி­மு­க­வில் உட்­கட்­சிப் பூசல் வெடித்­துள்ள நிலை­யில், சசி­கலா அடுத்­த­டுத்து மேற்­கொண்டு வரும் நட­வ­டிக்­கை­கள் அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அதி­மு­க­வில் உள்ள தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் பேசி­யது, மழைக்­கா­லத்­தில் பொது­மக்­களை சந்­தித்து ஆறு­தல் கூறி­யது என்று அர­சி­யல் களத்­தில் காய்­களை நகர்த்தி வரும் சசி­கலா, அதி­முக தலைமை குறித்­தும் அவ்­வப்­போது மறை­மு­க­மாக விமர்­சித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், ஜெய­ல­லிதா மக்­க­ளின் இத­யங்­களில் இன்­னும் வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாக அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்ட அவர், ஜெய­ல­லி­தா­வின் நினைவு நாளன்று ஏதே­னும் முக்­கிய அறி­விப்பை வெளி­யி­டு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.