கரூர்: கரூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆபாசமாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையிலும் பாடம் நடத்திய புகாரில் அறிவியல் ஆசிரியர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் பாகநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்தவர் பன்னீர்செல்வம், 46.
இவர் இருபாலின மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் அறிவியல் பாடத்தை மிகவும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
விசாரணையில், ஆசிரியர் பன்னீர்செல்வம் பாலியல் உணர்வைத் தூண்டும் விதிமாகப் பாடம் நடத்தியதும் பாலியல் சம்பந்தமான கேள்விகளை தேர்வாக வைத்ததும் தெரியவந்தது.

