விபத்தில் சிக்கிய இளையரின் இதயத்துடிப்பை மீட்ட தாதி

விபத்தில் சிக்கிய இளையரின் இதயத்துடிப்பை மீட்ட தாதி

1 mins read
34c00811-5754-426e-9d4a-c0f4de7a1cf9
முதலுதவி சிகிச்சை அளிக்கும் தாதி வனஜா. படம்: தமிழக ஊடகம் -

மன்­னார்­குடி: மன்­னார்­குடி அருகே இரு­சக்­கர வாக­னத்­தில் சென்று கொண்­டி­ருந்த வசந்த் என்ற கல்­லூரி மாண­வர், ஆடு­க­ளின் மீது மோதி மூச்சு, பேச்சு இன்றி உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் சாலை­யில் விழுந்து கிடந்­துள்­ளார்.

அப்­போது, அவ்­வ­ழி­யாக மன்­னார்­குடி அரசு மருத்­து­வ­மனையில் பணியாற்றும் வனஜா என்ற தாதி காரில் சென்றுகொண்டிருந்தார்.

இளையர் விழுந்து கிடப்பதைக் கண்டவர், உட­ன­டி­யாக காரை நிறுத்தி, அரு­கில் சென்று இளை­ஞ­ரைப் பரி­சோ­தனை செய்­தார். அப்­போது அவ­ரது நாடித் துடிப்பு நின்று ஆபத்­தான நிலை­யில் இருந்­தது தெரியவந்தது.

இதை­ய­டுத்து, சிபி­ஆர் என சொல்­லப்­படும் மார்­பின் மீது இரு கைகளையும் சேர்த்து வைத்து அழுத்தி முத­லு­தவி சிகிச்சை அளித்­துள்­ளார்.

இத­னால், மீண்­டும் அந்த இளை­ஞ­ரின் இத­யத்­து­டிப்பும் நாடித்­து­டிப்­பும் சீரா­னது. இளை­ஞ­ருக்­கு சுய­நினைவும் திரும்­பி­யது. மாண­வ­ரின் உயி­ரைக் காப்­பாற்­றிய தாதிக்கு பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்றன.

அதன்பிறகு, அவசர சிகிச்சை வாகனம் மூலம் மாண­வர் வசந்த் மேல் சிசிக்­சைக்­காக தஞ்சை மருத்­து­வக் ­கல்­லூரி மருத்­து­வ­மனைக்கு அனுப்­பி­ வைக்­கப்­பட்­டார்.