கழிவறையில் சிசு சடலம்: தாய் கைது

1 mins read
39af5814-1b94-4770-a344-a1a8c442e39a
பிரியதர்ஷினி. படம்: ஊடகம் -

தஞ்­சா­வூர்: தஞ்சை அரசு மருத்­து­வக் கல்­லூரி கழி­வறையில் பெண் சிசு­வின் சட­லம் ஒன்று இரு நாட்­க­ளுக்கு முன்பு கண்­டெ­டுக்­கப்­பட்டது. இந்த சம்பவம் தொடர்­பில், அந்­தக் குழந்தையைப் பெற்று, கொன்று­போட்ட தாயைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்தனர்.

தஞ்­சா­வூர் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்ள மேற்கத்திய கழி­வ­றை­யில் இம்­மா­தம் 4ஆம் தேதியன்று சரி­யாக தண்­ணீர் வர­வில்லை.

இதையடுத்து சுத்­தம் செய்­யச் சென்ற தூய்­மைப் பணி­யா­ளர்­கள் தண்­ணீர் வரா­ததால் கழி­வறைத் தொட்டியுடன் இணைப்­பில் உள்ள தண்­ணீர்த் தொட்­டி­யைத் திறந்து பார்த்­த­னர். அதில், பிறந்து சில மணி நேரமே ஆன சிசு தொப்­புள் கொடி­யு­டன் இறந்து கிடந்­தது.

தீவிர சிகிச்சைப் பிரி­வில் உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­களில் பதி­வான காட்­சி­க­ளை­யும் காவல் நிலை­யத்­தி­னர் ஆய்வு செய்­த­னர்.

இதைத் தொடர்ந்து, வல்­லம் அருகே உள்ள ஆலக்­குடியைச் சேர்ந்த பன்­னீர்­செல்­வம் மகள் பிரி­ய­தர்­ஷி­னியை, 23, நேற்­று ­காலை கைது செய்­த­னர்.

விசாரணை­யில், திருப்­பூ­ரி­லுள்ள பின்னலாடை நிறு­வ­னத்­தில் வேலை பார்த்து வந்­த­போது ஒரு­வரை காத­லித்து கர்ப்­ப­மா­கி உள்ளார். காத­லன் திரு­ம­ணம் செய்துகொள்ள மறுத்­து­விட்­ட­தால், வேறு யாருக்­கும் தெரி­யா­மல் கழிவறைக்குச் சென்று தானே பிர­ச­வித்து, அக்­கு­ழந்­தை­யைக் கழி­வறைத் தொட்­டிக்குள் அமுக்கி கொலை செய்­ததும் தெரி­ய­வந்­தது.