சென்னை விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் குறைப்பு

2 mins read
4eb1530c-336d-494f-8f52-54cc1e0906f7
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள ரேபிட் பிசிஆர் மையம் முன்பு மருத்துவச் சோதனைக்காக காத்திருக்கும் பயணிகள்.படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் -

சென்னை: சென்னை அைனத்துலக விமான நிலை­யத்­தில் ஓமிக்­ரான் பரி­சோதனைக்­கா­கக் காத்­தி­ருக்­கும் பயணிகளுக்­காக கூடு­தல் வச­தி­கள் செய்து தரப்­பட்­டுள்­ளன. அத்­து­டன், அவர்­கள் காத்­தி­ருக்­கும் நேர­மும் இப்­போது குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக சென்னை விமான நிலைய அதி­கா­ரி­கள் கூறியுள்­ள­னர்.

உரு­மா­றிய புதிய வகை கொரோ­னா­வான ஓமிக்­ரான், தமி­ழ­கத்­திற்­குள் நுழைந்து விடக்­கூ­டாது என்­ப­தில் மாநில அரசு அதிக அக்­கறை காட்டி வரு­கிறது.

இந்த நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக உள்ள சுகா­தார அதி­கா­ரி­களும் விமான நிலைய அதி­கா­ரி­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன் பல்­வேறு தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இது­வரை சென்னை விமான நிலை­யத்­தில் ஆர்டி-பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள ஆறு முதல் ஏழு மணி வரை­யி­லும் ரேபிட் பரி­சோ­தனை செய்து கொள்ள ஒரு மணி நேரம் வரை­யி­லும் பய­ணி­கள் காத்­தி­ருக்­கும் நிலை இருந்­து­வந்­தது. இத­னால் பய­ணி­கள் பெரும் சிர­மத்­துக்கு ஆளா­கி­னர்.

இந்­நி­லை­யில், இந்­தக் காத்­தி­ருப்பு நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, ஆா்டி-பிசிஆா் பரி சோத­னைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேர­மும் ரேபிட் பரி­சோ­த­னைக்கு 30 முதல் 45 நிமி­ட­மும் மாற்று உள்­நாட்டு விமா­னங்­களில் செல்­லக்­கூ­டிய பய­ணி­க­ளுக்கு 20 நிமி­டங்­க­ளி­லும் சோதனை முடிவு கள் கிடைப்­ப­தற்கும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அதோடு குடி­யு­ரிமை, சுங்­கச்­சோ­தனை பிரி­வு­க­ளி­லும் கூடு­தல் 'கவுண்­டர்­கள்' திறக்­கப்­பட்டு, பய­ணி­கள் தாம­த­மில்­லா­மல் மருத்­து­வப் பரி­சோ­தனைப் பகு­திக்கு வர ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன், காபி, சிற்­றுண்டி போன்­ற­வற்றை நியா­ய­மான விலை­யில் விற்­பனை செய்­ய­வும் கடை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இல­வச தொலை­பேசி வச­தி­கள், பாலூட்­டும் தாய்­மார்­க­ளுக்குத் தனி அறை, வைஃபை, தொலைக்­காட்சி, வெளி­நாட்­டுப் பணத்தை மாற்­றிக் கொள்வதற்கான வச­தி­களும் செய்து தரப்­பட்­டுள்­ளன.

ஒரு நாளில் 700 முதல் 800 பய­ணி­க­ளுக்குச் சோத­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்றன. பய­ணி­க­ளுக்கு இன்னும் பல வச­தி­க­ளைச் செய்து தர­வும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக விமான நிலைய அதி­கா­ரி­கள் தெரி­வித்தனர்.