நரிக்குறவ இன மக்களை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்

நரிக்குறவ இன மக்களை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்

2 mins read
be48f2d2-4ea8-469f-9532-9a3e19ebe313
-

நாகர்­கோ­வில்: திரு­நெல்­வேலி பேருந்­தில் ஏறிய நரிக்­கு­றவ இன மக்­கள் சத்­தம் போட்­ட­படி பேசிக் கொண்டு வந்­த­தால், அவர்­களை நடு­வ­ழி­யி­லேயே இறக்­கி­விட்ட பேருந்து ஓட்­டு­ந­ரையும் நடத்­து­நரையும் இடை­நீக்­கம் செய்து போக்கு­வ­ரத்து அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.

பொது­வாக நரிக்­கு­றவ இன மக்­கள் தங்­கள் வாழ்­வா­தா­ர­மாக ஊசி, பாசி, நரிப்­பல், சவுரி முடி விற்­ப­னையை செய்­து­வ­ரு­வது வழக்­கம். இது­போல் இவர்­கள் நாகர் கோவில் பேருந்து நிலை­யத்­தி­லும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் ஊசி, பாசி விற்­பனை செய்­து­விட்டு, மாலை நேரத்­தில் நாகர்­கோ­வி­லில் இருந்து திரு­நெல்­வேலிக்குச் செல்­லும் பேருந்­தில் இவர்­கள் வசிக்­கும் வள்­ளி­யூர் பகு­திக்­குச் சென்று கொண்­டு இருந்துள்ளனர்.

அப்­போது, அவர்­கள் தங்களுக்­குள் சண்­டை­யிட்­ட­படி, சத்­த­மாக பேசிக் கொண்­டி­ருந்­த­தா­கக் கூறப் ­ப­டுகிறது. இதைக்­கண்ட இதர பய­ணி­கள் முகம் சுழித்து, அவர்­களை இறக்கி விடும்­படி நடத்­து­ந­ரி­டம் கோரியுள்ள­னர்.

இதை­ய­டுத்து, நரிக்­கு­ற­வர்‌ சமு­தா­யத்­தைச் சேர்ந்த ஒரு வய­தான ஆண்‌, ஒரு பெண்‌, ‌ஒரு குழந்தை ஆகி­யோர் நடு­வ­ழி­யில் அவர்­க­ளது உட­மை­க­ளு­டன் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இந்த சம்­ப­வம் காணொ­ளி­யாக சமூக வலைத்­த­ளத்­தில் பரவ, இதற்கு கண்­ட­னக் குரல்­கள் வலுத்து வரு­கின்­றன.

அண்­மை­யில், கும­ரி­யில் மீன் விற்­கும் செல்­வ­மேரி என்ற மூதாட்­டியை பேருந்­தில் இருந்து இறக்கி விட்டனர்.

இந்தச் சம்­ப­வத்­துக்கு முதல்­வர் மு.க. ஸ்டா­லின் கடும் கண்­ட­னம் தெரி­வித்த நிலை­யில், பேருந்து ஓட்­டு­நரும் நடத்­து­நரும் பணி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

இதே­போன்ற மற்­றொரு சம்­ப­வம் இப்போது நடந்துள்ள நிலையில், அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலை தருவதாக திமுக எம்.பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.