ெசன்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த ஒன்பது மாண வர்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதியானதை அடுத்து, சுகாதாரத் துறை, கல்வித் துறை அதிகாரிகளுடன் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் பேசியபோது, "தொற்று உறுதியான மாணவர்கள் ஒன்பது பேரும் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
"கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடாமல் தகுந்த சமூக இடைவெளியுடன் உணவு உண்ண அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
"அத்துடன், 18 வயதுக்கு மேலான அனைத்து கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.
ஓமிக்ரான் பாதிப்பில்லை
தொற்று ஏற்பட அதிக ஆபத்துள்ள 13 நாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கும் தொற்று பாதிப்பு குறைந்த நாடுகளில் இருந்து வந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். 13 பேருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் ஒருவர் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினார். மற்ற 12 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை எனத் ெதரியவந்துள்ளது என்று கூறினார்.
698 பேருக்கு பரிசோதனை
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 698 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று 746 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் 7,883 பேர் சிகிச்சையில் உள்ளனர். 15 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
763 மாணவருக்கு பரிசோதனை
ஒன்பது மாணவர்களுக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் 'ஏ.சி. டெக்' வளாகத்தில் உள்ள 763 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதை அமைச்சர் உள்ளிட்ேடார் நேரில் சென்று பார்வையிட்டனர்.