பாரதியின் 139வது பிறந்தநாள்; தலைவர்கள் புகழஞ்சலி

பாரதியின் 139வது பிறந்தநாள்; தலைவர்கள் புகழஞ்சலி

2 mins read
d9c57841-b215-417f-90d0-8b3eb66d95cd
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதியாரின் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செய்தார். படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: மகாகவி சுப்­பி­ர­ம­ணிய பார­தி­யார் தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் உள்ள (அன்றைய திரு­நெல்­வேலி மாவட்­டம்) எட்­ட­ய­பு­ரத்­தில் 1882ஆம் ஆண்டு டிசம்­பர் 11ஆம் தேதி பிறந்தார். நேற்றைய இந்த நாளில் பார­தி­யா­ரின் 139வது பிறந்தநாள் உல­க­மெங்­கும் கொண்­டா­டப்­பட்­டது. இதை முன்­னிட்டு தலை­வர்­கள் பலரும் ஆங்காங்கே பார­தி­யா­ருக்கு மாலைசூட்டி, மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னர்.

டெல்­லி­யில் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, பார­தி­யா­ரின் உரு­வச்­சி­லைக்கு மலர்­தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.

அமித் ஷா தமி­ழில் வெளி­யிட்டுள்ள டுவிட்­டர் பதி­வில், "பார­தத் தாயின் புதல்­வன் மகா­கவி சுப்­பி­ர­ம­ணிய பாரதியின் ஜெயந்­திக்கு எனது அஞ்­சலி.

"பெண்­கள் அதி­கா­ரம் பெறு­வ­தற்­கான ஒரு முன்­னோடி இவர்," என்று குறிப்பிட்­டுள்­ளார்.

இந்நிலையில், எட்­ட­ய­பு­ரத்­தில் உள்ள அவ­ரது சிலைக்கு தமி­ழக அமைச்­சர்­கள் தங்­கம் தென்­ன­ரசு, அன்­பில் மகேஷ், கீதா­ஜீ­வன் உள்­ளிட்­டோர் மரி­யாதை செலுத்­தி­னர்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னும் டுவிட் செய்­துள்­ளார். அதில், "நீடு­து­யில் நீக்­கப் பாடி­வந்த நிலா! திறம்­பாட வந்த மற­வன்! அறம்­பாட வந்த அறி­ஞன்! பட­ரும் சாதிப் படைக்கு மருந்­தாம் மகா­கவி பார­தி­யா­ரின் 139வது பிறந்­த­நாள் இன்று!

"தமி­ழுக்­குத் தொண்­டு­செய்த அப்­பைந்­த­மிழ்த் தேர்ப்­பா­க­னின் நினை­வைப் போற்­றி­டும் நமது அர­சின் முயற்­சி­கள் என்­றும் தொடர்ந்­தி­டும்!," என்று தெரிவித்துள்ளார்.

இதே­போல், யாழ்ப்­பா­ணம் நல்­லூர் அர­சடி தெரு­வில் அமைந்துள்ள பார­தி­யா­ரின் திரு­வு­ருவச் சிலைக்கு இந்­திய துணைத்­ ­தூ­தர் ராகேஷ் நட்­ராஜ் மாலை அணி­வித்து, மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.

அத்­து­டன், மகா­கவி சுப்­பிர­ம­ணிய பார­தி­யா­ரின் திரு­வு­ரு­வச் சிலையை யாழ்ப்­பா­ணம் - வட்­டுக்­கோட்­டை பகுதியில் மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்­தன் திறந்துவைத்­தார்.