மதுரை: மதுரை புது நத்தம் சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த
மேம்பால விபத்துக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதே முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
அத்துடன், அனுபவமில்லாத ஊழியர்களைப் பணியில் அமர்த்தி யிருந்ததும் காரணமென விசா ரணை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மதுரையில் 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அைமக்கப்பட்டு வந்த பறக்கும் பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இன்னும் சிலர் காயமடைந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை மூவர் கொண்ட நிபுணர் குழுவினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வந்த இவர்கள், நேற்று தங்களது விசாரணை அறிக்கை களைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அளித்தனர்.
விபத்து ஏற்பட்டதற்கான பல்வேறு காரணங்களையும் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டி இருந்தனர்.
மேம்பால விபத்திற்கு முக்கிய காரணமாக பணியின்போது பயன்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேம்பாலப் பணிகளில் பயிற்சியும் அனுபவமும் இல்லாத ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதும் விபத்துக்கு காரண மாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தன்று நடைபெற்ற மேம்பாலப் பணியின்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் நியமிக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் குழுவினர் இல்லாதது, கட்டுமான முறையில் மாற்றங்களைப் பின்பற்றாமல் பழைய முறைப்படி கட்டுமானம் நடந்ததும் விபத்துக்கு காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக ஆறு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்களிடம் உரிய அபராதத்தை வசூலித்த பிறகு, கட்டுமானப் பணிகளில் மாற்றம் செய்து ஒப்புதல் பெற்ற பின்னரே பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

