கங்கை தீர்த்தம் விநியோகம்

கங்கை தீர்த்தம் விநியோகம்

1 mins read
032ddf31-3fe4-41c1-aa73-bfb2cdc103d0
ராமேஸ்வரத்தில் பஜ்ரங்தாஸ் பாபா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் இலவசமாக வழங்கப்பட்டது.படம்: ஊடகம் -

ராமேஸ்­வ­ரம்: ராமேஸ்­வ­ரம் ராம­நாத சுவாமி கோயி­லுக்கு வரும் பக்­தர்­கள் கோயி­லில் விற்­கப்­படும் கங்கை தீர்த்­தத்தை பணம் கொடுத்து வாங்கி சுவா­மிக்கு அபி­ஷே­கம் செய்து தரி­சித்து வந்­த­னர்.

ஆனால், கொரோனா ஊர­டங்­குக்­குப் பிறகு கங்கை தீர்த்­தம் பெறு­வ­தில் கோயில் நிர்­வா­கம் அதிக அக்­கறை செலுத்­த­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பக்­தர்­களின் இந்தக் கவலையைப் போக்கும் வகையில், நேற்று முதல் ராமேஸ்­வரம் சன்­னதி தெரு­வில் உள்ள பஜ்­ரங்­க­தாஸ் ­பாபா சேவா அறக்­கட்­டளை சார்­பில் பக்­தர்­க­ளுக்கு தலா 200 மில்லி கொண்ட கங்கை தீர்த்­தம் பாட்­டி­ல் ­இல­வ­ச­மாக வழங்­கப்பட்டு வருகிறது. இது தினமும் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.