'கறுப்பு நிகழ்வு இனியும் நிகழக்கூடாது'

'கறுப்பு நிகழ்வு இனியும் நிகழக்கூடாது'

1 mins read
6aa7eb40-8e8a-4458-8dd7-31df6d116884
-

விழுப்­பு­ரம்: அர­சுப் பேருந்து ஓட்­டு­நர், நடத்­து­நர்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துத்­துறை அனுப்பியுள்ள சுற்­ற­றிக்­கை­யில், பாலி­யல் அத்­து­மீ­றல்­களில் ஈடு­ப­டு­வோர் இனி நிரந்­த­ரப் பணி­நீக்­கம் செய்­யப்படு­வர் என்று கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

"விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் நடை பெற்ற செயல் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­திற்கு மாபெ­ரும் தலைக் குனிவை ஏற்­ப­டுத்திவிட்டது. போக்கு­வ­ரத்­துக் கழக வர­லாற்­றில் இது ஒரு கறுப்பு நிகழ்­வா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது. வருங்­கா­லத்தில் பணி­யா­ளர்­கள் இது­போன்ற செய­லில் ஈடு­ப­டக்­கூ­டாது. மீறி ஈடு­படும் பணி­யா­ளர்­கள் நிரந்­த­ரப் பணி நீக்­கம் செய்­யப்­ப­டு­வர்," என்று எச்­ச­ரித்­துள்­ள­னர்.

விழுப்­பு­ரத்­தில் இருந்து கொத்­த­மங்­க­லம் பகு­திக்கு அர­சுப் பேருந்­தில் தன்­னந்­த­னி­யாக இரவில் சென்றுகொண்­டி­ருந்த 20 வயது கல்­லூரி மாண­விக்கு நடத்­து­நர் சிலம்­ப­ர­சன், 32, பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­துள்­ளார்.

இதைக் கண்­டும் காணா­த­தும் போல் ஓட்­டு­நர் அருள்­செல்­வன், 45, இருந்­துள்­ளார்.

பேருந்தை நிறுத்­தும்­படி மாணவி கூறி­யும் நிறுத்­தா­த­தால், மாணவி பேருந்­தில் இருந்து குதித்­துள்­ளார். இந்த சம்­ப­வத்­தைத் தொடர்ந்து நடத்­து­நரும் ஓட்டுநரும் கைதாகினர்.

இதற்­கி­டையே, இவர்­கள் இரு­வ­ரை­யும் பணி­யிடை நீக்­கம் செய்து போக்­கு­வ­ரத்­துக் கழகப் பொது மேலா­ளர் உத்­தர விட்­டுள்­ளார்.