தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50,000 வழக்குகளுக்குத் தீர்வு

2 mins read
8fb7146f-07a9-43b6-8009-e1137106eaa9
-

சென்னை: 'லோக் அதா­லத்' எனும் மக்­கள் நீதி­மன்­றத்­தின் மூலம் தமி­ழ­கத்­தில் 50,000 வழக்­கு­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்­டுள்ளது.

நாடு முழு­வ­தும் நீதி­மன்­றங்­களில் நிலு­வை­யில் இருக்­கும் வழக்குகளை விரை­வாக முடி­வுக்கு கொண்­டு­வர ஆண்­டுக்கு நான்கு முறை தேசிய அள­வில் மக்­கள் நீதி­மன்­றத்தை உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வுப்­படி தேசிய சட்­டப்­பணி ஆணைக்­குழு நடத்தி வரு­கிறது.

இதன்­படி நாடு முழு­வ­தும் இந்த ஆண்­டுக்­கான 4வது தேசிய லோக் அதா­லத் நடத்­தப்­பட்­டது.

தமி­ழ­கத்­தில் மாநில சட்­டப்­ பணிகள் குழு சார்­பில் மக்­கள் நீதி­மன்­றம் நடத்­தப்­பட்­ட­தாக தினத்­தந்தி தக­வல் தெரி­வித்­தது.

உயர்­நீ­தி­மன்ற பொறுப்பு தலைமை நீதி­பதி முனீஸ்­வர் நாத் பண்­டாரி அறி­வு­றுத்­த­லின்­படி உயர்­நீ­தி­மன்ற மூத்த நீதி­ப­தி­கள் பரேஷ் உபாத்­தி­யாய், எம்.துரை­சாமி ஆகி­யோர் மேற்­பார்­வை­யில் இந்த லோக் அதா­லத் நடந்­தது.

சென்னை உயர்­நீ­தி­மன்ற மற்றும் உயர்­நீ­தி­மன்ற மதுரை கிளை­யில் உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் மற்­றும் உயர்­நீ­தி­மன்ற ஓய்­வு­பெற்ற நீதிபதிகள் எட்டு பேர் தலை­மை­யில் எட்டு அமர்­வு­கள் அமைக்­கப்­பட்­டன.

இதுபோல மாவட்ட அள­வி­லும் நீதி­ப­தி­கள் தலை­மை­யில் அமர்­வு­கள் அமைக்­கப்­பட்­டன.

மொத்­தத்­தில் மாநி­லம் முழு­வ­தும் பணி­யில் உள்ள மற்­றும் ஓய்வு­ பெற்ற நீதி­ப­தி­கள் தலை­மை­யில் 417 அமர்­வு­கள் அமைக்­கப்­பட்­டன.

இந்த நீதி­ப­தி­கள் வழக்­கில் தொடர்­பு­டைய இரு தரப்­பி­ன­ரை­யும் அழைத்து சம­ர­சப் பேச்­சு­வார்த்தை நடத்தி வழக்­கு­களை விசா­ரித்­த­னர்.

காலை 10 மணிக்கு தொடங்­கிய விசா­ரணை மாலை 6 மணிக்கு முடி­வ­டைந்­தது.

இதில் முடி­வுக்கு வந்த வழக்­கு­க­ளின் விவ­ரங்­கள் குறித்து தமிழ்­நாடு மாநில சட்­டப் பணி­கள் ஆணைக்­குழு உறுப்­பி­னர் செய­லர் நீதி­பதி ராஜ­சே­கர் தெரிவித் தார்.

"தேசிய லோக் அதா­லத்­தில் காசோலை மோசடி வழக்கு, சிவில் வழக்கு, ஜீவ­னாம்­சம் தொடர்­பான குடும்ப நல வழக்கு, தொழி­லா­ளர் வழக்கு என்று பல வழக்­கு­கள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்கொள்ளப்­ பட்­டன. வழக்­கில் தொடர்­பு­டைய இரு தரப்­பி­ன­ரை­யும் அம­ர­வைத்து, நீதி­ப­தி­கள் அவர்­க­ளி­டம் சம­ரசப் பேச்­சு­வார்த்தை நடத்தி, இரு தரப்பு சம்­ம­தத்­து­டன் ஏரா­ள­மான வழக்­கு­களை முடி­வுக்கு கொண்டு வந்­துள்­ள­னர்.

"மொத்­தம் 57,773 வழக்­கு­களில் இரு தரப்­பி­ன­ரின் சம்­ம­தத்­து­டன் தீர்வு காணப்­பட்­டுள்­ளன.

"இதன் மூலம் வழக்கு தொடர்ந்­த­வர்­க­ளுக்கு 388 கோடியே 30 லட்­சத்து 56 ஆயி­ரத்து 722 ரூபாய் கிடைத்­துள்­ளது," என்­றும் நீதிபதி ராஜசேகர் தெரிவித்தார்.