மதுக்கடை நிர்வாகம்: தடுப்பூசி போடாவிடில் மது விற்கப்படாது

மதுக்கடை நிர்வாகம்: தடுப்பூசி போடாவிடில் மது விற்கப்படாது

1 mins read
90c1a10b-d93b-48bd-bc08-f2592f3bf9a6
-

திரு­வள்­ளூர்: தடுப்­பூசி போட்ட வர்­க­ளுக்கு மட்­டுமே மது­பா­னத்தை விற்­பனை செய்­ய­வேண்­டும் என்று திரு­வள்­ளூர் மாவட்ட 'டாஸ்­மாக்' மதுக்­கடை நிர்­வா­கம் உத்­த­ர­விட்டு உள்­ளது.

தடுப்­பூசி போடா­த­வர்­களை வணிக வளா­கம், பேரங்­கா­டி­கள், கடை­வீ­தி­கள், துணிக்­க­டை­கள் உள்­ளிட்ட பொது இடங்­களில் அனுமதிக்­கக் கூடாது என்று சுகா­தா­ரத் துறை ஏற்­கெ­னவே அறி­வு­றுத்தி இருந்­தது.

மதுரை, தேனி, கிருஷ்­ண­கிரி உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் பொது இடங்­க­ளுக்கு வரு­ப­வர்­கள் தடுப்­பூசி போட்­டி­ருப்­பது கட்­டாய மாக்­கப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக அந்­தந்த மாவட்ட நிர்­வா­கங்­களே முடிவு எடுத்து அறி­வித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், தடுப்­பூசி போடா தவர்­க­ளுக்கு மது­பா­னம் விற்­கக் கூடாது என மாவட்ட மேலா­ளர்­கள் மூலம் 'டாஸ்­மாக்' ஊழி­யர்­க­ளுக்கு குறுந்­த­க­வல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

திரு­வள்­ளூர் மாவட்ட 'டாஸ்­மாக்' மேலா­ளர் தனது ஊழி­யர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்ள குறுந்­த­க­வ­லில், "மது­பா­னக் கடைக்கு வரும் வாடிக்­கை­யா­ள­ரின் தடுப்­பூசி சான்­றி­த­ழைச் சரி­பார்த்த பின்­னரே அவர்­க­ளுக்கு மது­பா­னம் விற்­பனை செய்­ய­வேண்­டும். கடை­யின் முகப்­பில் இது­கு­றித்த வாச­கம் ஒட்­டப்­பட்­டி­ருக்க வேண்­டும். என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.