நீலகிரி: கூடலூர் பகுதியில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையைப் பிடித்து அடர்வனத்துக்குள் விடும்படி 20க்கும் மேலான கிராமங்களில் வசித்துவரும் 2,400 குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி நேற்று போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பாரந்தொரை, செலுக்காட்டி, புளியம்பாரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தனி ஒரு காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.
20க்கும் மேற்பட்ட வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தி உள்ள இந்த யானை, வீடுகளில் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளவற்றைக் கொட்டி இறைத்துவிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
ஒரு சில நேரங்களில் யானை வருவது தெரியாமல் வீட்டுக்குள் இருந்தவர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது, பகலில் விளைபயிர்களைச் சேதப்படுத்துவதுடன் சாலைகளிலும் நடந்து செல்கிறது. சில நேரங்களில் வீடுகளுக்கு அருகேயும் வந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த யானை கொடுத்துவரும் தொந்தரவைப் பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள், அதனை அடர்வனத்துக்குள் விரட்டிவிட வேண்டும் அல்லது யானைகள் முகாமுக்குப் பிடித்துச் செல்லவேண்டும் என்ற கோரிக்கையுடன் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி வனத்துறையினருக்கு தங்களது எதிர்ப்பைத் ெதரிவித்துள்ளனர்.
இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து அந்த ஒற்றை யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை செவிமடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக வனத்துறையினர் மீது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து, இந்தப் போராட்டம் மூலம் மாநில அரசின் கவனத்தை ஈர்க்க வீடுகளிலும் சாைலயிலும் கறுப்புக்கொடி ஏற்றியிருந்த னர். 50க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருவ தாக புதிய தலைமுறை தொலைக் காட்சி செய்தி கூறியுள்ளது.

