காவல் நிலையத்துக்கு துப்பாக்கியுடன் வந்த மூதாட்டி

காவல் நிலையத்துக்கு துப்பாக்கியுடன் வந்த மூதாட்டி

1 mins read
0be69079-015d-42ab-ba92-0a2733b8eee6
-

பொள்­ளாச்சி: பொள்­ளாச்சி கிழக்கு காவல்­நி­லை­யத்­துக்கு 72 வயது மூதாட்டி ஒரு­வர் ைகயில் துப்­பாக்­கி­யு­டன் வந்­தி­ருந்­தார்.

அவர் துப்­பாக்­கி­யும் கையு­மாக இப்படி வந்­தி­ருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதி­கா­ரி­க­ளி­டம், கீழே கிடந்து எடுத்­த­தா­கக் கூறி கைத்­துப்­பாக்­கியை மூதாட்டி ஒப்­ப­டைத்­தார்.

கோவை மாவட்­டம், ஒட்­டப்பிடா­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் விஜ­ய­லட்­சுமி, 72. பொள்­ளாச்சியில் வசிக்­கும் பேத்தியைப் பார்ப்­ப­தற்­காக வந்த இவர், கோவை சாலை­யோரம் இரு கையு­றை­க­ளு­டன் துப்­பாக்­கி கிடந்ததாகக் கூறி அவற்றை­ தனது பேரனுடன் வந்து காவல்­நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்துள்­ளார்.

இதை­த்தொடர்ந்து நடந்த விசா­ர­ணை­யில் மூதாட்­டி­யும் பேர­னும் முன்­னுக்­குப்­பின் முர­ணாகப் பதில் அளித்துள்ளனர்.

அதன்பிறகுதான் விஜயலட்சுமி யின் மகன் செல்வன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி என்பது காவல்துறை யினருக்குத் தெரியவந்தது. இந்த துப்பாக்கி செல்வன் வசம் இருந்தி ருக்கலாம் என சந்தேகப்படும் காவல்துறையினர் மூதாட்டியின் மகனைத் தேடிவருகின்றனர்.