இயந்திர அறையுடன் கிணற்றில் புதைந்த பெண் சடலமாக மீட்பு

இயந்திர அறையுடன் கிணற்றில் புதைந்த பெண் சடலமாக மீட்பு

1 mins read
a921f1aa-0226-491f-8b26-d7a0586ef4ab
கிணற்றுக்குள் புதைந்த பெண்ணின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்கள். படம்: தமிழக ஊடகம் -

சிவ­கங்கை: சிங்­கம்­பு­ணரி அருகே இயந்­திர அறை­யோடு கிணற்­றுக்­குள் புதைந்த அஞ்­சலை, 42, என்ற பெண்­ணின் உடலை பல மணி நேரப் போராட்­டத்­திற்­குப் பிறகு மீட்­புப்­ப­டை­யி­னர் மீட்­டுள்­ள­னர்.

சிவ­கங்கை மாவட்­டம், சிங்­கம்­பு­ண­ரி­யில் வசித்து வரு­கி­றார் ராசு. இவ­ரது மனைவி அஞ்­சலை, கடந்த ஞாயி­றன்று அருகே இருந்த தோட்­டத்­தில் கூலி வேலைக்­குச் சென்­றுள்ளார். ஆனால், இரவு நேர­மா­கி­யும் வீடு திரும்­பா­த­தால் அஞ்­ச­லை­யைத் தேடி ராசு தோட்­டம் உள்ள இடத்திற்­குச் சென்­றார்.

அங்கு கிணற்­றோ­ரம் இருந்த இயந்­திர அறை இடிந்து கிணற்­றுக்­குள் விழுந்­தி­ருந்­தது.

கிணற்­று­மேட்­டில் அஞ்­ச­லை­யின் சாப்­பாட்­டுப் பையும் இருந்­தது.

இைதய­டுத்து, அஞ்­சலை கிணற்­றுக்­குள் புதைந்­தி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் ராசு தீய­ணைப்புத்­து­றைக்­குத் தக­வல் கூறி­னார்.

தண்­ணீரை வெளி­யேற்றி மண்ணை அகற்­றும் பணி­யில் தீய­ணைப்பு வீரர்­களும் காவல்­து­றை­யி­ன­ரும் ஈடு­பட்­ட­னர். பல மணி நேரம் கழித்து மண்­ணுக்­குள் இருந்து அஞ்­ச­லை­யின் கை மட்­டும் வெளியே தெரிந்­தது. 24 மணி நேரப் போராட்­டத்­திற்­குப் பிறகு அஞ்­ச­லை­யின் உடலை நேற்று காலை மீட்­புப்­ப­டை­யி­னர் மீட்­ட­னர்.