கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத் தடை

கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத் தடை

2 mins read
70dcc0f1-4f9c-4262-bc1b-2ec6337b154d
-

சென்னை: பண்­டிகை சம­யத்­தில் ஒரே நேரத்­தில், ஒரே இடத்­தில் பொது­மக்­கள் ஒன்று திரள்­வ­தால் கிரு­மிப் பர­வல் அதி­க­ரிக்­கும் சூழல் உள்­ள­தால், வரும் ஆங்­கி­லப் புத்­தாண்டு தரு­ணத்­தில் அனைத்­துக் கடற்­க­ரை­க­ளி­லும் மக்­கள் ஒன்று கூட தமி­ழக அரசு தடை விதித்து உள்­ளது.

அத்­து­டன், இனி சுழற்சி முறை­யில் ஒரு­நாள் விட்டு ஒரு­நாள் பாடம் நடத்­தப்­ப­டா­மல் தொடர்ந்து பள்ளி, கல்­லூ­ரி­கள் நடத்­தப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

தமிழ்­நாட்­டில் கொரோ­னா­வின் தாக்­கம் ஒரு­வ­ழி­யா­கக் குறைந்து வரும் நிலை­யில், அண்டை மாநி­லங்­களில் அதி­க­ரித்து வரும் உரு­மா­றிய ஓமிக்­ரான் அச்­சம் மக்­க­ளைத் தொற்றி உள்­ளது.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வல் அறவே இல்­லாத மாநி­ல­மாக தமிழ கம் விளங்­க­வும் ஓமிக்­ரான் தொற்­றைக் கருத்­தில் கொண்­டும் இன்று 15ஆம் ேததி­யு­டன் முடி­வ­டைய இருந்த கொரோனா கட்­டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 31ஆம் ேததி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இது­கு­றித்து விளக்­கம் அளித்­துள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லின், "அண்டை மாநி­லங்­களில் ஓமிக் ரான் பரவி வரு­வ­தால், எதிர்­வ­ரும் பண்­டி­கைக் காலங்­களில் மக்­கள் கூட்­ட­மா­கக் கூடு­வ­தைத் தவிா்க்க வேண்­டும்.

"முகக்­க­வ­சம் அணி­யா­மல் சென்­றால் நோயால் பீடிக்­கப்­படும் வாய்ப்பு அதி­க­முள்­ளது.

"எனவே, பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தோடு, சமூக இடை­வெ­ளி­யை­யும் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்க வேண்­டும்.

"பொது­மக்­கள் நலன் கருதி அரசு மேற்­கொள்­ளும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் முழு ஒத்­து­ழைப்பை நல்க வேண்­டும்," என கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இயல்பு நிலையில் பள்ளி திறப்பு

பள்ளி, கல்­லூரி மாண­வா்­க­ளின் எதிா்கா­லத்­தைக் கருத்­தில் கொண்டு ஜன­வரி 3ஆம் தேதி­யில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை­யி­லான பள்­ளி­களும் அனைத்­துக் கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்­பப் பயிற்சி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­ன­வும் சுழற்சி முறை­யைக் கைவிட்டு இயல்­பா­கச் செயல்­படும் என்­று அரசு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

அரசியல் கூட்டங்கள் ரத்து

சமு­தாய, கலா­சார, அர­சி­யல் கூட்­டங்­கள் போன்ற பொது­மக்­கள் அதி­கம் கூடும் நிகழ்­வு­க­ளுக்­கான தடை தொட­ரும் என­வும் கொரோனா நோய்த்­தொற்று கட்­டுப்­பாடு நடை­மு­றை­கள் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு, விதி­மீ­றல்­களில் ஈடு­ப­டு­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என­வும் எச்­ச­ரித்­துள்­ளது.

கடை­களில் பணி­பு­ரி­ப­வர்­களும் வாடிக்­கை­யா­ளர்­களும் முகக்­க­வ­சம் அணி­வதை சம்­மந்­தப்பட்ட நிர்­வா­கத்­தி­னர் உறுதி செய்ய வேண்­டும். சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கும் வகை­யில் கடை களில் அதி­கமான நபர்­களை அனு­ம­திக்­கக்கூடாது என்­றும் அறி­வு­றுத்­தப்பட்­டுள்­ளது.