ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கடைசி நபரும் உயிரிழந்தார்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கடைசி நபரும் உயிரிழந்தார்

2 mins read
a10b0cd1-83d0-4c3a-b41d-2fde40f1254a
கேப்டன் வருண் சிங் உயிர் பிழைத்தால் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மேலும் விவரங்கள் தெரிய வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வின் முப் ­ப­டை­க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத் மர­ண­ம­டைந்த ஹெலி­காப்­டர் விபத்­தில் கேப்­டன் வருண் சிங் மட்­டும் படு­கா­யத்­து­டன் உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் மீட்­கப்­பட்­டார்.

ராணுவ மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்ட நிலை­யில் நேற்று அவர் உயி­ரி­ழந்­தார்.

நீல­கிரி மாவட்­டம் குன்­னூ­ரில் இம்­மா­தம் 8ஆம் தேதி நிகழ்ந்த ராணுவ ஹெலி­காப்­டர் விபத்­தில் பய­ணம் செய்த 14 பேரில் முப்­ படை­க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத் அவ­ரது மனைவி உள்­பட 13 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதில் விமா­னப்­படை குரூப் கேப்­டன் வருண் சிங் மட்­டும் 80 விழுக்­காடு படு­கா­யத்­து­டன் மீட்கப்­ பட்டு குன்­னூர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

பின்­னர் மேல் சிகிச்­சைக்­காக அவர் பெங்­க­ளூரு ராணுவ மருத்து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்பட்டு சிகிச்சை பெற்று வந்­தார்.

ஆனால் சிகிச்சை பல­னின்றி வருண் சிங் நேற்று கால­மா­னார்.

இதன்­மூ­லம் ஹெலி­காப்­ட­ரில் பய­ணம் செய்த 14 பேரும் உயி­ரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து மத்­திய அர­சால் நிய­மிக்­கப்­பட்ட ஏர் மார்­ஷல் மான­வேந்­திர சிங் 4 நாட்­கள் சம்­பவ இடத்தை நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு செய்து விசா­ரணை நடத்­தி­னார். தொடர்ந்து விபத்­தில் மீட்­கப்­பட்ட தட­யங்­கள் கோவை மாவட்­டம் சூலூர் விமா­னப்­படை தளத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டு ஆய்வு மேற்­கொள்­ளப்பட்டு வரு­கிறது.

ஹெலிகாப்­டர் விபத்­தில் தட­யங்­கள் முக்­கிய ஆதா­ர­மாக கருதப்­ ப­டு­கிறது. ஹெலிகாப்­டர் வால், முன்­ப­குதி, இறக்கை போன்ற பாகங்­கள் அங்­கி­ருந்து கயிறு மூலம் எடுத்து ஒரு பகு­தி­யில் வைக்­கப்­பட்டு உள்­ளது. அந்தப் பாகங்­கள் இருந்த பகு­தி­யில் தட­யங்­கள் உள்­ளதா என்று விமா­னப்­ப­டை­யி­னர் ஆய்வு செய்து சேக­ரித்து வரு­கின்­ற­னர்.

விபத்து நடந்த பகு­திக்கு வெளி­நபர்கள் செல்­வதைத் தடுக்க ராணுவ பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. மேலும் ஹெலி­காப்­டர் விபத்­தின் போது மீட்புப் பணி­க­ளுக்கு உத­விய நஞ்­சப்ப சத்­திர கிராம மக்­க­ளின் சேவை அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்துள்­ளது. இதை யடுத்து அந்த கிரா­மத்தை ராணுவம் தத்­தெ­டுத்து உள்­ளது.