பணத்துக்காக 'மணமகள் தேவை' என ஒரு குடும்பமே ஏமாற்றுவதாக புகார்

பணத்துக்காக 'மணமகள் தேவை' என ஒரு குடும்பமே ஏமாற்றுவதாக புகார்

2 mins read
dd534b92-93a5-4d55-8e0e-981170e03797
தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட நித்தியலட்சுமி. பெண்ணின் முகம் சற்றே மறைக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

ஆவடி: மேட்­ரி­மோனி திரு­மண இணை­யத்­த­ளம் மூலம் 'மண­ம­கள் தேவை' என பதிவு செய்து, ஒரு குடும்பமே பெண்­களின் ­நகை, பணத்­தைச் சுருட்­டும் வேலையில் ஈடுபட்டு வரு­வ­தாக நித்­தி­ய­லட்­சுமி என்­ப­வர் ஆவடி அனைத்து மக­ளிர் காவல்நிலை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

"இனி­யும் பெண்­க­ளின் வாழ்க்கை என் கண­வ­ரா­லும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரா­லும் பாதிக்­கப்­ப­டக் கூடாது. நான் வர­தட்­ச­ணை­யாகக் கொடுத்த 15 சவ­ரன் நகை, ஒரு லட்­சம் ரூபாய் பணத்­தை­ காவல்துறை அதி­கா­ரி­கள் மீட்­டுத் தர நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என­வும் நித்தியலட்சுமி தனது புகாரில் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை ஆவடி அருகே வசித்து வரும் நித்­திய லட்­சு­மிக்­கும், 34, கோயம்­புத்­தூ­ரைச் சேர்ந்த விஜ­ய­கு­மார், 37, என்­ப­வ­ருக்­கும் கடந்த 2020 ஏப்­ரல் மாதம் இரு­வீட்­டார் சம்­ம­தத்­து­டன் இரண்­டா­வது திரு­ம­ணம் நடந்­துள்­ளது.

தற்­போது இவர்­க­ளுக்கு 8 மாத ஆண் குழந்­தை­யும் உள்­ளது.

இந்­நி­லை­யில், விஜ­ய­குமார் பணி நிமித்­த­மாக வெளி­யூர் செல்­வ­தா­கக் கூறி­விட்டுச் சென்ற நிலை­யில், கைபேசி மூலம் அவ்­வப்­போது வெவ்­வேறு எண்­களில் நித்­தி­ய­லட்­சு­மி­யு­டன் பேசி வந்­துள்­ளார்.

இதற்கிடையே, கடந்த மூன்று நாட்­க­ளுக்கு முன்பு நித்­திய லட்­சு­மியை அழைத்­துப் பேசிய நாத­ஸ்ரீ என்பவர், விஜ­ய­கு­மாரை கடந்த அக்­டோ­பர் மாதம் 24ஆம் தேதி திரு­ம­ணம் செய்து­கொண்­ட­தா­க­க் கூறியுள்ளார்.

அத்­து­டன், தற்­போது அவர் தன்னை ஏமாற்­றி­விட்டு மற்­றொரு பெண்­ணு­டன் சென்­று­விட்­ட­தா­க­வும் கூறி­யுள்­ளார். இதுதொடர்­பான திரு­மண பத்­தி­ரிகை, புகைப்­ப­டத்­தை­யும் நித்­திய லட்­சு­மிக்கு 'வாட்ஸ்­ஆப்' மூலம் அவர் அனுப்­பி­யுள்­ளார்.

விஜ­ய­கு­மார் திரு­ம­ண­மா­னதை மறைத்து மேட்ரி­மோ­னி­யில் மண­மகள் தேவை என பதிவு செய்து 10க்கும் மேற்­பட்ட பெண்­களை ஏமாற்­றி­யது தெரி­ய­வந்­தது.

பணம், நகையை அபகரிக்க மீண்­டும் மேட்­ரி­மோ­னி­யில் மண­மகள் தேவை என்ற போர்வையில் விஜ­ய­கு­மார், அவ­ரது தங்கை ரேவதி, அப்பா சக்­தி­வேல், அம்மா அம்­ச­வேணி ஆகி­யோர் கூட்­டாக ஏமாற்­றி வருவதாக நித்­தியலட்­சுமி புகார் தெரி­வித்­துள்­ளார்.