மீண்டும் சசிகலா வழக்கு: தொண்டர்கள் அதிர்ச்சி

மீண்டும் சசிகலா வழக்கு: தொண்டர்கள் அதிர்ச்சி

2 mins read
f99070dd-a886-4ebc-85d0-d8bb15b1e004
வி.கே.சசி­கலா. படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: பெங்­க­ளூரு சிறை­யில் சொகுசு வச­தி­யைப் பெற மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் ஆரு­யிர்த் தோழி வி.கே.சசி­கலா லஞ்­சம் கொடுத்த வழக்­கில் இரண்டு வாரங்­களில் முழு­மை­யான குற்­றப்­பத்­தி­ரி­கை­யைத் தாக்­கல் செய்ய ஊழல் தடுப்­புப் படைக்கு கர்­நா­டக உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சொத்­துக் குவிப்பு வழக்­கில் தண்­டனை பெற்ற சசி­கலா, இள­வரசி ஆகி­யோர் பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அப்­போது, சிறை­யில் சொகுசு வச­தி­க­ளைப் பெறு­வ­தற்­காக சிறைத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு பல கோடி ரூபாய் லஞ்­சம் கொடுத்­த­தாக சசி­கலா மீது கடந்த 2018ஆம் ஆண்டு கர்­நா­டக ஊழல் தடுப்பு காவல்­துறை அதி­கா­ரி­கள் வழக்­குப் பதிந்­த­னர்.

அதன்­பி­றகு, இவ்­வ­ழக்கு தொடர்­பில் காவல்­துறை அதி­கா­ரி­கள் அவ்­வ­ளவாக தீவி­ரம் காட்டி விசா­ர­ணையை நடத்­த­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இந்­நி­லை­யில், இவ்­வ­ழக்­கில் குற்­றப்­பத்­தி­ரி­கை­யைத் தாக்­கல் செய்­யும்­படி ஊழல் தடுப்­புப் படை அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டக் கோரி சென்­னை­யைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர் கீதா என்­ப­வர் கர்­நா­டக நீதி­மன்­றத்­தில் பொது­நல மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­தார்.

இந்த பொது­நல மனு கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்­தின் தலைமை நீதி­பதி ரிது­ராஜ் அவஸ்தி தலை­மை­யி­லான அமர்வு முன்­னி­லை­யில் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது வாதிட்ட வழக்­க­றி­ஞர், குற்­றப்­பத்­தி­ரிகை உள்­துறை அமைச்­சரின் ஒப்­பு­த­லுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்டுள்­ளது என்­றும் அத­னால் இன்­னும் இரு வாரங்­கள் கால­ அ­வ­கா­சம் வழங்கு­மா­றும் கேட்­டுக்­கொண்­டார்.

இதை ஏற்­றுக்­கொண்ட நீதி­பதி அமர்வு, வழக்கு விசா­ர­ணையை மேலும் இரண்டு வார காலத்­துக்கு ஒத்திவைத்து உத்­த­ர­விட்­டது.

ஒரு­வேளை இரண்டு வாரத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­படா­விட்­டால், உள்­துறை செய­லா­ளர் நேரில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்­றும் அமர்வு கூறியுள்ளது.

ரூ.2 கோடி லஞ்ச வழக்கு விசா­ரணை மீண்­டும் இப்­போது சூடு ­பி­டித்­துள்ள நிலை­யில், குற்­றச்­சாட்­டுக்கு ஆளான அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க உள்­துறை அமைச்­ச­ருக்கு கோப்­பு­கள் அனுப்­பப்­பட்டு உள்­ளன.

இன்­னும் இரு வாரங்­களில் அதி­ர­டி­யான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் சசி­க­லா­வுக்கு அடுத்த சிக்­கல் தொடங்­கி­விட்­ட­தா­கக் கூறப் ­படுகிறது. இத­னால் அவ­ரது தொண்­டர்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

இதுபோன்ற சட்­டப் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள என்றோ சசி­கலா தயா­ரா­கி­விட்­டார் என்று கூறும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள், விரை­வில் அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீர்ந்­து­வி­டும் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.