மூட்டைக் கட்டி வீசப்பட்ட சிறுமி; மூன்று சவரன் நகைக்காக கொன்றவர் கைது

மூட்டைக் கட்டி வீசப்பட்ட சிறுமி; மூன்று சவரன் நகைக்காக கொன்றவர் கைது

1 mins read
7967d343-efb6-4d1a-90e2-d5c7884c411c
-

கோவை: கோவை­யில் 15 வயது சிறுமி கொல்­லப்­பட்டு, மூட்­டைக் கட்டி வீசப்­பட்ட நிலை­யில், ஒரு புத­ரில் இருந்து அவ­ரது சட­லம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக சிறு­மி­யின் குடும்ப நண்­பர் முத்­துக்­கு­மார் என்­ப­வர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கோயம்­புத்­தூர் மாவட்­டம், சர­வ­ணம்­பட்டி அரு­கில் உள்ள யமுனா நக­ரில் வசித்த சிறு­மி­யைக் கடந்த 11ஆம் தேதி முதல் காண­வில்லை எனக் கோவை அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், "முத்­துக்­கு­மார் என்­ப­வர் சிறு­மி­யின் வீட்­டின் அருகே வசித்து வந்­துள்­ளார். கட்­டட மேற்­பார்­வையாள­ரான இவர், நன்கு பரிட்­ச­ய­மான சிறு­மியை நகைக்­கா­கவே கொலை செய்­ததா­கக் கூறி­யுள்­ளார். விசா­ரணை தொடர்கிறது," என்­ற­னர்.

முன்­ன­தாக சிறு­மி­யின் உடல் பிரே­தப் பரி­சோ­த­னைக்­காக கோவை அரசு மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்ட போது, சிறு­மி­யின் உயி­ரி­ழப்­பிற்கு நீதி கேட்­டும் குற்­ற­வா­ளி­க­ளைக் கண்­ட­றிந்து கைது­செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யும் சிறு­மி­யின் உற­வி­னர்­கள் திடீர் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.