இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா கொண்டாட்டம்: மக்கள் அஞ்சலி

இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா கொண்டாட்டம்: மக்கள் அஞ்சலி

1 mins read
8d896c7f-83fa-4695-bf71-d9ccca2c80c7
வரும் 19ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்தப் போர் நினை­வுச் சின்­னத்தைப் பார்வையிட பொது­மக்­க­ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போரில் உயி­ரி­ழந்த வீரர்­க­ளுக்கு பொது­மக்­கள் மெழுகுவத்தி ஏற்­றி­யும் மலர்­தூ­வி­யும் அஞ்­சலி செலுத்தி வருகின்றனர். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போரில் குறிப்­பாக, தமி­ழ­கத்­தில் இருந்து ஏரா­ள­மான வீரர்­கள் பங்­கேற்றனர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: பாகிஸ்­தா­னு­டன் கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் இந்­தியா வெற்­றி­பெற, 93,000 பாகிஸ்­தான் வீரர்­கள் இந்­தி­யா­வி­டம் சர­ண­டைந்­த­னர். இந்­தப் போரின் விளை­வாக வங்­க­தே­சம் விடு­தலை அடைந்­தது.

இப்போரில் தாய் நாட்­டிற்­காக இன்­னு­யிர் நீத்த முப்­ப­டை­க­ளின் வீரர்­களை நினை­வு­கூரும் விதத்தில், ஆண்டுதோறும் டிசம்­பர் 16ஆம் தேதி 'விஜய் திவாஸ்' எனும் வெற்றிதினம் கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது.

இவ்வாண்டு இந்த வெற்­றி­யின் 50ஆம் ஆண்டு என்பதால் பொன்விழாவாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது.

உயிர் தியா­கம் செய்த வீரர்­கள் நினை­வாக, சென்னை காம­ரா­ஜர் சாலை­யில் கட்­டப்­பட்­டுள்ள போர் வீரர்­கள் நினை­வுச் சின்­னத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று முன்­தி­னம் மலர்­வ­ளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்­தி­னார். அத்­து­டன், தரை, கடல், ஆகா­யம் ஆகிய முப்­ப­டை­க­ளின் உயர் அதி­கா­ரி­களும் அஞ்­சலி செலுத்­தி­னர்.

இந்தப் பொன்­விழா கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு, போர் நினை­வுச் சின்­னத்தை பார்­வை­யிட பொது­மக்­க­ளுக்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.