சென்னை:சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 8, 9, 10ல் உலக தமிழ் வம்சாவளி மாநாடு நடக்கவுள்ளதாக தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார், உலக நாடுகளில் வாழும் தமிழ் அமைப்பு களின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் உலக தமிழ் வம்சாவளி மாநாடு, பொங்கல் விழா உள்ளிட்டவை நடத்தப்படும் என்றார். இவ்வாண்டு மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பெண் தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டம், தமிழ் காமன்வெல்த் அமைப்பு ஆகியவை துவக்கப்பட உள்ளன. அதேபோல தமிழர்களின் கலை, கலாசாரம், உணவு, விளையாட்டு போன்ற வற்றை பறைசாற்றும் நிகழ்ச்சி களும் நடைபெறும். இதில், உலக தமிழ் எம்.பி.,க்கள் பங்கேற்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

