'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் நீக்கப்பட்ட வரிகளைச் சேர்த்துப் பாட வேண்டும்'

'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் நீக்கப்பட்ட வரிகளைச் சேர்த்துப் பாட வேண்டும்'

2 mins read
bd8951ea-7f17-4c60-884e-231d030e7201
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் நீக்கப்பட்ட வரிகளைச் சேர்த்துப் பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: தமி­ழக அரசு விழா மற்­றும் நிகழ்ச்­சி­களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்­டும் என்­றும் அந்­தப் பாடல் மாநில அர­சின் பாட­லாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று அண்­மை­யில் தமி­ழக அரசு அறி­வித்­தது.

இந்த நிலை­யில் தமிழ்த்தாய் வாழ்த்­துப் பாடலை முழு­மை­யாக பயன்­ப­டுத்த வேண்­டும் என்று பா.ஜ.க. மாநில தலை­வர் அண்­ணா­மலை கோரிக்கை விடுத்து ள்ளார். இது தொடர்­பாக அறிக்கை ஒன்றை அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

"தமிழ்த்தாய் வாழ்த்­தினை அர­சின் மாநில பாட­லாக அங்­கீ­க­ரித்து தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள புதிய அர­சா­ணையை பா.ஜ.க. மிக­வும் வர­வேற்­கிறது.

"மனோன்­ம­ணி­யம் சுந்­த­ரம் பிள்ளை 1891ஆம் ஆண்­டில் எழுதி வெளி­யிட்ட 'நீரா­ருங் கட­லு­டுத்த நில­ம­டந்­தைக் கெழி­லொழு­கும்' என்ற பாடலை 1970ஆம் ஆண்டு அப்போ­தைய முதல்­வர் கரு­ணா­நிதி தமிழ்த் தாய் வாழ்த்­தாக அறி­வித்து அர­சாணை வெளி­யிட்­டார்.

"அப்­போதே அப்­பா­டலை முழு­மை­யாகப் பயன்­ப­டுத்­தா­மல் அதில் சில வரி­களைத் தவிர்த்­தது சர்ச்­சை­யா­னது. மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் இருந்­தி­ருந்­தால், தாம் எழு­திய இப்­பா­ட­லுக்கு கிடைத்த மாநில அர­சின் அங்­கீ­கா­ரத்தை நினைத்து பெரி­தும் மகிழ்ந்­தி­ருப்­பார். ஆனால் அப்­பா­டலை தமி­ழக அரசு முழு­மை­ யாகப் பயன்­ப­டுத்­தா­மல் அதில் சில வரி­களை நீக்கி திருத்­திப் பயன் ­ப­டுத்­து­வதை அவர் கண்­டிப்­பாக ஏற்­றுக்கொண்­டி­ருக்க மாட்­டார்.

"ஆகவே தமி­ழக முதல்­வர் தமிழ் மீது நல்­லெண்­ணம் கொண்டு செய்த முயற்­சியை அரை­கு­றை­யாக செயல்­ப­டுத்­தா­மல், அவர் பதவி ஏற்­கும்போது எடுத்­துக்கொண்ட உறு­தி­மொ­ழி­யின்­படி, கட­வுள் நம்­பிக்கை வரி­களை சிதைக்­கா­மல் முழு­மை­யாக பாடலை பயன்­ப­டுத்து வதே கரந்தை தமிழ்ச் சங்­கத்­தின் தலை­வர் உமா மகே­சு­வ­ர­னா­ருக்குப் பெருமை சேர்ப்­ப­தாக அமை­யும். இதை தாங்­கள் சொந்த விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு இடம் தரா­மல் செய்­வீர்­கள் என்று நம்­பு­கி­றேன்," என்று அண்­ணா­மலை தமது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

பாஜக மக­ளி­ரணி தேசி­யத் தலை­வ­ரும் சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ரு­மான வானதி சீனி­வா­ச­னும் இது குறித்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், "மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் எழு­திய பாட­லில் ஒரு பகு­தியை மட்­டுமே தமிழ்த்­தாய் வாழ்த்­தாக அன்­றைய முதல்­வர் மு.கரு­ணா­நிதி அறி­வித்­தார்.

'தமிழ்த் தெய்வ வணக்­கம்' என்ற பாட­லில் உள்ள குறிப்­பிட்ட சில வரி­கள் தமிழ்த்தாய் வாழ்த்­துப் பாட­லில் இடம்­பெ­ற­வில்லை. அவற்­றில் கட­வுள் பற்­றிய வரி­கள் வரு­வ­தா­லேயே நீக்­கப்­பட்­டுள்­ளா­கத் தெரி­கிறது. மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் தமிழை தெய்­வ­மா­கத்­தான் பார்க்­கி­றார்.

"எனவே, மாநிலப் பாட­லாக அறி­விக்­கப்­பட்­டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்­துப் பாட­லின் முழுப்பாட­லை­யும் பாட வேண்­டும். முழுப்பாட­லை­யும் மாநில பாடலாக­ அ­றி­விக்க வேண்­டும்," என்று வானதி சீனி­வா­சன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.