'ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது'

'ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது'

1 mins read
d90f0241-270d-42bb-84ae-4804ceb08271
-

ஐத­ரா­பாத்: நீல­கிரி மாவட்­டம் குன்­னூர் அருகே நஞ்­சப்ப சத்­தி­ரத்­தில் இம்மாதம் 8ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று விமா­னப்­படை தள­பதி வி.ஆர்.சவுத்ரி தெரி­வித்தார்.

"குன்­னூர் அருகே நடந்த ஹெலி­காப்­டர் விபத்து தொடர்­பாக முழு­மை­யான விசா­ரணை முடி­வ­டை­வ­தற்கு முன்­னர் எதை­யும் கூற விரும்­ப­வில்லை.

"எப்­படி தவறு நடந்­தது என்­பது குறித்து ஒவ்­வொரு கோணத்­தி­லும் விசா­ரணை நடத்தப்­ப­டு­வது அவ­சி­யம். அதன் மூலம் பொருத்­த­மான கார­ணங்­களைக் கண்­ட­றிய வேண்­டும்," என்றார் அவர். விபத்து தொடர்­பாக நேர்­மை­யான முறை­யில் விசா­ரணை நடக்­கிறது என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த விபத்­திற்குப் பிறகு விவிஐபிக்கள் பய­ணம் தொடர்­பான விதி­மு­றை­கள் மறு ஆய்வு செய்யப்­ படும். விசா­ரணை அறிக்கை அடிப்­ப­டை­யில் இந்த ஆய்வு இருக்­கும் என்று திரு வி.ஆர். சவுத்ரி குறிப்பிட்டார்.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்­படைத் தலைமைத் தள­பதி பிபின் ராவத் உள்­பட 14 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்த ஹெலி­காப்­டர் விபத்து சம்­ப­வம் நாடு முழு­வ­தும் பெரும் அதிர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யது.