கேரளா நோய்த்தொற்று கோழிகளுக்குத் தடை

கேரளா நோய்த்தொற்று கோழிகளுக்குத் தடை

1 mins read
00567c15-5e59-40d4-8800-b82b046e25b8
-

கம்­பம்: கேரளா மாநி­லம் ஆலப்­புழா மாவட்­டத்­தில் கடந்த 1 வாரத்­துக்கு முன்பு பறவைக் காய்ச்­ச­லால் கோழி­கள், வாத்­து­கள் அதிக அள­வில் இறந்­தன.

இதை­ய­டுத்து நோய்த் தொற்று உள்ள கோழி, வாத்­து­கள் தமி­ழ­கத்­துக்­குள் வரா­மல் தடுக்க தேனி மாவட்ட எல்­லை­யில் முகாம் அமைத்து கண்­கா­ணிக்­கு­மாறு கால்­ந­டைத்­துறை இணை இயக்­கு­நர் சுப்­பையா பாண்­டி­யன் உத்­த­ர­விட்­டார்.

அதன்­படி தமி­ழக-கேரள எல்லைப்­ப­கு­தி­யான கம்­பம் மெட்டு, குமுளி சோத­னைச்­சா­வ­டி­யில் பற­வைக் ­காய்ச்­சல் தடுப்பு முகாம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் இருந்து கோழி­கள், வாத்து, முட்டை ஆகி­ய­வற்றைக் கொண்டு வரும் வாக­னங்­க­ளுக்குத் தடை விதிக்கப்­பட்­டுள்­ளது.

அதே சம­யம் கேர­ளா­வில் கால் நடை­கள், கோழி­களை ஏற்றி இறக்கிவிட்டு திரும்­பும் வாக­னங்­கள் முழு­வ­தும் கிரு­மி­நா­சினி தெளித்த பிறகு தமி­ழ­கத்­துக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் இருந்து கேர­ளா­வுக்கு கோழி, முட்டை மற்­றும் கால்­ந­டை­கள் செல்­லும் வாக­னங்­கள் தடை­யின்றி இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் இது­வரை பறவைக் காய்ச்­சல் அச்சம் இல்லை என்ற போதி­லும் மறு உத்­த­ரவு வரும் வரை இந்த நடை­முறை தொட­ரும் என்று அதி­கா­ரி­கள் கூறினர்.