சேலம்: இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தேர்தலை நடத்திய ஒரே கட்சி அதிமுகதான் என்று அதிமுக இணை ஒருங் கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் இரண்டாம் கட்டமாக 36 மாவட்டங்களில் இம்மாதம் 22, 23 தேதிகளில் உள்கட்சித் தேர்தல் நடைபெறஉள்ளது. கோவை கழக மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலுக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆணையாளர் களாக செயல்படும் தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் கழக அமைப்பு தேர்தலை முதன்முதலில் நடத்தி முடித்தது சேலம் புறநகர் மாவட்ட கழகம்தான். அதற்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், திமுகவைக் கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தை வெற்றி கரமாக நடத்திக் கொடுத்ததற்கும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறேன்," என்றார்.
"ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக என்பதை நிரூபித்துக்காட்டி உள்ளோம். அடித்தட்டு மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும்தான் எம்ஜிஆர் இந்த கட்சியை உருவாக்கினார்.
"அவரது வழியில் பல்வேறு சிரமங்களுக்கும் இடையில் தனது உயிர் இருக்கும்வரை அதிமுகவை வழிநடத்தியவர் ஜெயலலிதா, தனக்குப் பின்னும் அதிமுக 100 ஆண்டுகள் வாழும் என்று தெரிவித்தவர் ஜெயலலிதா.
"அதிமுக ஜனநாயகக் கட்சி. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்திய அளவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தேர்தலை நடத்தியது அதிமுகதான்," என்று எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்தார்.

