அரக்கோணம்: அரக்கோணம் அருகே 'தீரன்' திரைப்பட பாணி யில் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பெண்கள் அணிந்திருந்த நகை, பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், செய்யூர் கிராமத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து வந்த கணக்காளர் புஷ்கரன், 23, அவரது தாய், பெரியம்மா, பாட்டி ஆகியோரை மூவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டும் வீச்சரிவாளால் தாக்கியும் 25 சவரன் நகை, ரூ.60,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கொள்ளையடித்தவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

