பேராவூரணி: மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பெண் ஒருவர், தனது அக்காள் மகனின் ஆறு மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் ெதாடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன். இவரது மனைவி ஷாலிகா. இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போகவே கணவனும் மனைவியும் அதிர்ச்சியடைந்து வீடு முழுவதும் குழந்தையைத் தேடி னர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள மீன்வளர்க்கும் தொட்டியில் குழந்தை இறந்து கிடக்க, சடலத்தை புதைத்துவிட்டனர்.
தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு கூறுகையில், "நசுருதீன் சின்னம்மா ஷர்மிளா பேகம், 48. இவரது கணவர் அசாருதீனுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.
"உடல்நிலை சரியாக உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் குறிசொல்லும் முகமது சலீம், 48, கூறியுள்ளார். இதனால் குழந்தையை நள்ளிரவில் தூக்கிச் சென்று தண்ணீர் உள்ள மீன்தொட்டியில் அமுக்கிக் கொன்றுள்ளனர்," என்றனர்.
குழந்தையின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஷர்மிளா பேகம், அவரது கணவர் அசாருதீன், குறிசொல்லும் முகமது சலீம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

