முன்னாள் அமைச்சரைப் பிடிக்க அவரது அக்கா மகன்கள் கைது

முன்னாள் அமைச்சரைப் பிடிக்க அவரது அக்கா மகன்கள் கைது

1 mins read
c30cd49a-674b-4ebc-bf3f-99584bb9bd3f
கே.டி.ராஜேந்­திர பாலாஜி. -

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் கே.டி.ராஜேந்­திர பாலாஜி கைது நட­வ­டிக்­கை­யில் இருந்து தப்­பிப்­ப­தற்­காக தலை­ம­றை­வாகி உள்­ள­தா­கக் கூறப்­படும் நிலை­யில், அவ­ரது சகோ­தரி மகன்­கள் வசந்­த­கு­மார், ரம­ணன், கார் ஓட்­டு­நர் ராஜ்­கு­மார் உள்­ளிட்­டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இம்­மூ­வ­ரி­ட­மும் தீவிர விசா ரணை நடந்து வரு­கிறது.

முன்­னாள் அமைச்­சர் ராஜேந்­திர பாலா­ஜி­யின் முன்­பிணை மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டதை அடுத்து தலை­ம­றை­வான அவ­ரைத் தேடும் பணி­யில் ஆறு தனிப்­படை காவல் துறை அதி­கா­ரி­கள் கள­மி­றங்கி உள்­ள­தாக விரு­து­ந­கர் எஸ்.பி. மனோ­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் அரசுத் துறையில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி ரூ.3 கோடி­யைப் பல­ரி­டமும் பெற்று இப்­போது வரை பணி­யும் வழங்காமல் பணத்­தை­யும் திருப்­பிக்கொடுக்­கா­மல் மோசடி செய்­துள்ளதாக ராஜேந்­திர பாலாஜி மீது விரு­து­ந­கர் காவல்­நிலையத்­தில் இரு வழக்­கு­கள் பதி­வாகி இருந்­தன.

இந்­நி­லை­யில், இந்த வழக்­கு­களில் இருந்து முன்­பிணை கோரிய ராஜேந்­திர பாலா­ஜி­யின் மனுவை சென்னை உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்ததை அடுத்து அவர் தலை­ம­றை­வா­னார்.

இந்­நி­லை­யில், ராஜேந்­திர பாலாஜி கர்­நா­ட­க மாநி­லம், பெங்­க­ளூ­ரு­வில் இருக்­க­லாம் என்ற தக­வ­லின் பேரில் ஒரு தனிப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­துள்­ள­னர்.