தலைமை ஆசிரியை கைது; 366 பள்ளிகளை இடிக்க உத்தரவு கழிவறை இடிந்ததில் மூன்று மாணவர்கள் பலி; 38 மாவட்டத்திலும் கட்டடங்கள் ஆய்வு மதுரை, புதுக்கோட்டையில் கட்டடங்கள் இடிப்பு

தலைமை ஆசிரியை கைது; 366 பள்ளிகளை இடிக்க உத்தரவு கழிவறை இடிந்ததில் மூன்று மாணவர்கள் பலி; 38 மாவட்டத்திலும் கட்டடங்கள் ஆய்வு மதுரை, புதுக்கோட்டையில் கட்டடங்கள் இடிப்பு

2 mins read
255bd514-ce10-4a42-afa7-5f0e98059b89
உயிரிழந்த எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் படித்து வந்த விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ். படங்கள்: ஊடகம் -

திரு­நெல்­வேலி: நெல்­லை­யில் சாஃப்டர் மேல்­நி­லைப் பள்­ளி­யின் கழி­வ­றைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாண­வர்­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வம் தொடர்­பில் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பள்­ளி­யின் தலைமை ஆசி­ரியை ஞான­செல்வி, பள்­ளித் தாளா­ளர் செல்­வ­குமாா், கட்­டட ஒப்­பந்­த­தா­ரர் ஜான் கென்­னடி ஆகிய மூவ­ரை­யும் வரும் 31ஆம் தேதி வரை சிறை­யில் அடைக்க நெல்லை மாவட்ட நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சாஃப்டர் பள்­ளி­யில் விபத்து நடந்த இடத்­தில் தொடர்ந்து இரண்­டா­வது நாளாக அதி­கா­ரி­கள் நேற்று ஆய்வு செய்­த­னர்.

"கழி­வ­றை­யின் முன்­பக்க சுவரை அஸ்­தி­வா­ரம் இல்­லா­மல் கட்­டி­யதே சுவா் இடிந்­த­தற்­கான கார­ணம்," என முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர். மறு உத்­த­ரவு வரும்­வரை சாஃப்டர் பள்­ளிக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, விபத்­திற்கு கார­ண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி உடற் கூராய்வு செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளின் உடலை வாங்க மறுத்து அவர்­க­ளது உற­வி­னர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதையடுத்து, அவர்­க­ளு­டன் நெல்லை ஆட்­சி­யர் விஷ்ணு பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.

உயி­ரி­ழந்த மாண­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு ஆறு­தல் கூறிய அமைச்­சர் ராஜ­கண்­ணப்­பன், அரசு அறி­வித்­த­படி, இறந்த மாண­வர்­க­ளின் குடும்­பத்­திற்கு தலா ரூ.10 லட்­சத்­தை­யும் காய­ம­டைந்த நான்கு மாண­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு தலா ரூ.3 லட்­சத்ைத யும் உதவி நிதி­யாக வழங்­கி­னார்.

"மாநி­லத்­தில் உள்ள அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் கழி­வறை, ஆய்­வ­கம், நூலகங்­களை ஆய்வு செய்வதற்கு பள்­ளிக்­கல்­வித் துறை சார்­பில் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது," என அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்­துள்­ளார்.

"பள்­ளி­யில் பல ஆசி­ரி­யர்­க­ளி­டம் கார் உள்­ளது. அவர்­களில் ஒரு­வர் தங்­க­ளது காரை கொடுத்து உத­வி­யி­ருந்­தால்­கூட உயி­ருக்­குப் போரா­டிய சுதீஷை காப்­பாற்றி இருக்­க­லாம். ஆனால், யாரும் முன்­ வ­ர­வில்லை," என சாஃப்டர் பள்ளி மாண­வர் ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கெனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 325 பள்ளிக் கட்டடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசுப் பள்ளிக் கட்டடங்கள் செயல்படுவதற்கு தகுதியற்றவை என்பதால் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.