22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்றுப் பதிவு

22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்றுப் பதிவு

2 mins read
62008245-c8e9-44dc-94b2-7b4e01c25529
-

அனைத்து நாடுகளில் இருந்தும் வரும் பயணிகளுக்குப் பரிசோதனை: தமிழகம் வலியுறுத்து

சென்னை: தமி­ழ­கத்­தில் தொற்­றுப் பாதிப்பு தொடர்ந்து இறங்­கு­மு­க­மாக உள்­ளது. தற்­போது 22 மாவட்டங்­களில் அன்­றா­டம் புதி­தாக தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் பதி­வாகி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் புதி­தாக மேலும் 613 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ள­தாக மாநில சுகா­தாரத்­துறை தெரி­வித்­த­து.

மேலும் ஒன்­பது பேர் பலி­யானதை அடுத்து மொத்த பலி எண்­ணிக்கை 36,676ஆக கூடியுள்­ளது. மாநி­லத்­தில் 7,407 பேர் தொற்­றுப் பாதிப்­புக்­காக சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

பல்­வேறு மாவட்­டங்­களில் தொற்­றுப் பர­வல் நன்கு கட்­டுக்­குள் வந்­துள்­ளது. இதன் எதி­ரொ­லி­யாக 22 மாவட்­டங்­களில் அன்­றாட தொற்று எண்­ணிக்கை பத்­துக்­கும் கீழ் பதி­வாகி வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் ஆக அதி­க­மாக, சென்­னை­யில் 125 பேரும் கோவை­யில் 101 பேரும் தொற்றுக்கு ஆளா­கி உள்­ள­னர். இவை தவிர வேறு எந்த மாவட்­டத்­தி­லும் அன்றாடத் தொற்று எண்­ணிக்கை நூறைக் கடக்­க­வில்லை என்று சுகா­தா­ரத்­துறை மேலும் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் தொற்று இரண்டு மணி நேரத்­துக்­குள் மிக வேக­மா­கப் பர­வும் தன்மை கொண்­டது என்ற தக­வல் வெளி­யா­னது.

இதையடுத்து, அனைத்து வெளி­நா­டு­களில் இருந்­தும் தமி­ழகம் வரும் பய­ணி­க­ளுக்கு கட்­டாய கொரோனா பரி­சோ­தனை செய்ய அனு­ம­திக்க வேண்­டும் என மத்­திய அர­சி­டம் தமி­ழக பொது சுகாதாரத்­துறை இயக்­கு­நர் மருத்துவர் செல்­வ­ விநாயகம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இது தொடர்­பாக மத்­திய அர­சுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில், தமி­ழ­கத்­தில் இது­வரை ஒரு­வ­ருக்கு மட்­டுமே ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனி­னும், இது­வரை 28 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்­புக்­கு­ரிய அறி­கு­றி­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­களில் நால்­வர் மட்­டுமே ஓமிக்­ரான் பாதிப்பு அதி­கம் உள்ள நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்­றும் அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

மீத­முள்ள 24 பேர் குறை­வான பாதிப்­புள்ள நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்ள அவர், இனி அனைத்து வெளி­நா­டு­களில் இருந்து வரும் எல்லாப் பயணிகளையும் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­படுத்த மத்­திய சுகா­தார அமைச்சு அனு­ம­திக்க வேண்­டும் என கேட்டுக்கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடைபெற்ற 15ஆவது மெகா தடுப்­பூசி முகாம் மூலம் 1.9 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இதற்­காக 50,000 இடங்­களில் தடுப்­பூசி மையங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இத்­த­க­வலை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்­சர் மா.சுப்­பிரம­ணி­யன், பொது­மக்கள் மனசாட்­சிக்­குப் பயந்தாவது தடுப்பூசி போட்­டுக்­கொள்ள வேண்டும் என்றார்.