திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழனின் 100வது பிறந்த நாள் விழா திமுகவினரால் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனம் பகுதியில் உள்ள நிதித்துறை வளாகத்தில் அவரது மார்பளவு வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அந்த வளாகத்திற்கு க.அன்பழகன் பெயரைச் சூட்டினார். திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்தவர் அன்பழகன்.
படம்: தமிழக ஊடகம்

