54 ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

54 ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

1 mins read
fb03f32d-3d3f-43ac-8764-b87bbf6baa34
-

ராமே­சு­வ­ரம்: இரு வெவ்­வேறு சம்­ப­வங்­க­ளில் ராமே­சு­வ­ரம் மீன­வர்­கள் 54 பேரை இலங்கை கடற்­படை கைது செய்­துள்­ளது.

மீன­வர்­கள் கச்­சத்­தீவு அருகே மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்­த­போது இந்­தக் கைது நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அப்­ப­கு­தி­யில் இலங்கை கடற்­படை வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­க­வும் அப்­போது ஆறு பட­கு­க­ளை­யும் அவற்­றில் இருந்த 42 மீன­வர்­களை­யும் கடற்­ப­டை­யி­னர் சுற்றி வளைத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மற்­றொரு சம்­ப­வத்­தில் 12 பேர் கைதா­கி­னர்.

கடந்த சனிக்­கி­ழமை இரவு மீன­வர்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக இலங்கை கடற் பகு­திக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­தால் கைது செய்­யப்­பட்­ட­தாக கடற்­படை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மீன­வர் கைது பின்­ன­ணி­யில் சீனா இருப்­ப­தாக தேசிய பாரம்­ப­ரிய மீன­வர்­கள் கூட்ட­மைப்பு குற்­றம்­சாட்டி உள்­ளது. நேற்று ராமே­சு­வ­ரத்­தில் மீன­வர்­கள் போராட்­டம் நடத்­தி­னர்.