ஒருமையில் பேசினால்: அமைச்சர் கடும் எச்சரிக்கை

ஒருமையில் பேசினால்: அமைச்சர் கடும் எச்சரிக்கை

1 mins read
60ec091b-293f-48a0-93e2-9610faabcf1c
-

கோவை: தவறு செய்­த­வர்­கள், கொள்­ளை­ய­டித்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் திமுக ஆட்­சி­யில் அவர்­கள் மீது நிச்­ச­யம் நட­வடிக்கை எடுக்­கப்­படும் என மின்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி கூறி­யுள்­ளார்.

கோவை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அரசு அதி­கா­ரி­கள், காவல்­துறை அதி­கா­ரி­களை மரி­யாதைக் குறை­வாகப் பேசு­வது தவறு என்­றார்.

"அண்­மை­யில் அதி­முக நடத்­திய ஆர்ப்­பாட்­டத்­தின்­போது அரசு, காவல்­துறை அதி­கா­ரிகளை ஒருமை­யில் பேசி­யுள்­ள­னர். அந்தப் பேச்­சு­கள் முகம் சுளிக்கும் அள­வுக்கு இருந்­தது. கடந்த காலங்­களில் அவர்­கள் செய்த தவறு­களை மறைத்­துப் பேசி­யுள்­ள­னர்.

"இனி­மேல் அதி­மு­க­வி­னர் அரசு அதி­கா­ரி­க­ள், காவல்­து­றை­யினரை ஒரு­மை­யில் பேசி­னால் அரசு வேடிக்கை பார்த்­துக்கொண்டிருக்­காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அமைச்­சர் செந்­தில் பாலாஜி.