சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போருக்கு அனைத்து வகைகளிலும் உதவிய சீன அரசு, இப்போது திடீரென ஈழத்தமிழர்கள் மீது பாசம் காட்டுவதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட கணக்குகள் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சீனாவையும், சிங்களத்தையும் எதிரியாகப் பார்க்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்திக்கொண்டு, இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கால்பதித்து இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
அந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, அண்மையில் சீனத் தூதர் தமிழராகவே மாறி ஆலய வழிபாடு நடத்தி, தமிழ் மீனவர்களுக்கு உதவிகளை வழங்கி, நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கான நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் ராமதாஸ் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

